நாளைக்கு காலைல கார் வரும்! ''அந்தோணி! போயி நாலு டீ வாங்கினு வா!'' அந்தோணி போகிறார். ''அந்தோணி, அந்த சைக்கிளை மட்டும் கொஞ்சம் துடைச்சுக் கொடேன்!'' - பதில் பேசாமல் அந்தோணி சைக்கிளைத் துடைக்கத் துவங்குகிறார். ''பாலு முதலியார் பணம் தர்றேன்னு சொன்னாரு... போயி வாங்கினு வர்றியா அந்தோணி?'' அடுத்த கால் மணி நேரத்தில் அந்தோணி பணத்துடன் வருகிறார். ஏகமாக வளர்ந்திருந்தாலும், கவனமாக வகிடெடுத்து வாரப்பட்ட தலைமுடி; ஒட்டிப்போன கன்னத்திலும் மோவாயிலும் மண்டிக்கிடக்கும் ஒழுங்கற்ற தாடி; எதிரில் இருக்கும் ஆளை எடைபோட முயலும் பளபள கண்கள்; அழுக்குச் சட்டையும் முக்கால்வாசி மடித்துவிடப்பட்ட பேன்ட்டுமாகக் காணப்படுகிறார் அந்தோணி. முழுப் பெயர் - அருள் அந்தோணி. மதுரையில் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்துவிட்டு, தபேலா வாசிப்பதில் வல்லவராக இருந்த அந்தோணி, மியூஸிக் டைரக்டர் ஆக வேண்டும் என்று ஏகப்பட்ட கனவுகளோடு சென்னையில் அடியெடுத்துவைத்தார். அந்தோணிக்கு லேசு பாசாகக் 'கஞ்சா’ அடிக்கும் வழக்கம் உண்டு. சென்னைக்கு வந்த பிறகு,. . .
இவருக்கு இசை மீது தனியா போதை இருக்கிறது .....
இசை உலகம் விரைவில் இந்த மேதையை இழக்க இருக்கிறது.....
கஞ்ஜா போதையென்றால், பலரின் மனைவியை அனுபவிக்கும் அந்த வீணையை மிக வேகமாக வாசிக்கும் மனிதருக்கு என்னவென்று சொல்லுவது?.... ஆனால் மக்கள் இந்த பெண் பித்தனிடம் சென்று லட்சங்களை கொடுத்து தனது மகள் திருமணத்திற்கும் கச்சேரி செய்ய தவம் இருக்கிறார்கள்....
ஹ்ம்ம். அமெரிக்காவாக இருந்தால், இவரின் இசையை ரெக்கார்ட் செய்து, மியுசிக் விடியோவாக விட்டு பிரபலபடுத்தி ஏஜண்ட் காசு சேர்த்து விட்டு, பின்னர் "டீ-அடிக்ஷன் சென்டரில்" சேர்த்து விட்டு அதையும் டிவி ப்ரோகிராமாக பண்ணி காசு சேர்த்து சாக அடித்து "ஹால் ஆப் பேம்"ல் போட்டு சி.டி விற்றுக் ராயல்டி பார்த்திருப்பார்கள். பிழைக்க தெரியாத இந்தியனில் இவரும் ஒருவர்!
போதை வஸ்துவால் குலைந்து போன அசாத்திய திறமைகளும்,வரங்களும்
பெற்ற இவரைப் போன்ற பலரைக் கடக்க நேர்கையில் வருத்தப் படுவதை தவிர வேறொன்றும் செய்ய இயலுவதில்லை...
அதனால் தான் போதையைத் தவறு என்று நமது கலாசாரம் சித்தரித்தது.
ஆனால் அது தனி மனித உரிமைக்கு எதிரானது என்ற கருத்தை யார் எப்போது திணித்தார்கள் என்று தெரியவில்லை...!
பிரம்மன் கணக்கு சில நேரங்களில் இப்படித்தான் தவறி விடுகிறது. சரியான அரவணைப்பும், ஆதரவும், வழிகாட்டுதலும் இருந்திருந்தால் இவர் இசை இன்பத்தில் திளைத்து கஞ்சாவை மெல்ல மெல்ல குறைத்திருக்கலாம்.
கலையரசி தாண்டவமாடினாலே பல தீய ஒழுக்கங்களும் அவளது சகோதரியின் மூலம் கொடுத்து விட்டுடுவாளோ? இம்மாதிரி நிறைய பேரு இருப்பாங்க சென்னையில். ஒழுக்கம் இல்லைன்னா, எவ்வளவு திறமை இருந்தாலும் இது தான் நிலை. இதுக்காக கஞ்சாவை வாய்க்கு வந்தபடி வசை பாட வருவோரே, ஒரு நிமிஷம் யோசியுங்கள், தவறு கஞ்சாவிலா, இல்லை அந்தோணியிடமா என்று. அதே ஒப்பீட்டை பலர் சாடும் டாஸ்மாக்கிற்கும் பொருந்தும்.
COMMENT(S): 13
இவர் கதை விரைவில் அந்தோணியின் தப்புத்தாளஙகள் என்ற தமிழ்ப்படமாக வரலாம்...
இவர் கதை விரைவில் அந்தோணியின் தப்புத்தாளஙகள் என்ற தமிழ்ப்படமாக வரலாம்...
"ஐயோ... என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே... தபேலா பைத்தியம் மாதிரிதான் கஞ்சாவும். ரெண்டுமே என்னைவிட்டுப் போகாது. ரெண்டுமே சந்தோஷமான விஷயங்கள்தான்!'' என்றார் சாதாரணமாக."
இவருக்கு இசை மீது தனியா போதை இருக்கிறது .....
இசை உலகம் விரைவில் இந்த மேதையை இழக்க இருக்கிறது.....
கஞ்ஜா போதையென்றால், பலரின் மனைவியை அனுபவிக்கும் அந்த வீணையை மிக வேகமாக வாசிக்கும் மனிதருக்கு என்னவென்று சொல்லுவது?.... ஆனால் மக்கள் இந்த பெண் பித்தனிடம் சென்று லட்சங்களை கொடுத்து தனது மகள் திருமணத்திற்கும் கச்சேரி செய்ய தவம் இருக்கிறார்கள்....
விந்தையான உலகமடா இது !
வுடுங்க சார், 88 வயசு வரைக்கும் வாழ்ந்து மகள் சிறையிலிருந்து எப்ப வருவாங்கிறதுவரை வாழ்க்கையை கடத்திட்டு இருக்கிறதுக்கு பதிலா, வாழ்க்கையா சந்தோஷமா அனுபவிச்சிருக்காரு அந்தோணி..
இவர் இப்போ எப்படி இருக்கார்? என்ன செய்துகொண்டு இருக்கார்? நலமாய் வாழ வாழ்த்துக்கள்.
ஹ்ம்ம். அமெரிக்காவாக இருந்தால், இவரின் இசையை ரெக்கார்ட் செய்து, மியுசிக் விடியோவாக விட்டு பிரபலபடுத்தி ஏஜண்ட் காசு சேர்த்து விட்டு, பின்னர் "டீ-அடிக்ஷன் சென்டரில்" சேர்த்து விட்டு அதையும் டிவி ப்ரோகிராமாக பண்ணி காசு சேர்த்து சாக அடித்து "ஹால் ஆப் பேம்"ல் போட்டு சி.டி விற்றுக் ராயல்டி பார்த்திருப்பார்கள். பிழைக்க தெரியாத இந்தியனில் இவரும் ஒருவர்!
இவர் புகைபடத்தை கொஞ்சம் தெளிவானதா போட்டா நல்லா இருந்திருக்கும்.
போதை வஸ்துவால் குலைந்து போன அசாத்திய திறமைகளும்,வரங்களும்
பெற்ற இவரைப் போன்ற பலரைக் கடக்க நேர்கையில் வருத்தப் படுவதை தவிர வேறொன்றும் செய்ய இயலுவதில்லை...
அதனால் தான் போதையைத் தவறு என்று நமது கலாசாரம் சித்தரித்தது.
ஆனால் அது தனி மனித உரிமைக்கு எதிரானது என்ற கருத்தை யார் எப்போது திணித்தார்கள் என்று தெரியவில்லை...!
பல நண்பர்கள் இருந்தும் ஒருவரும் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள உதவவில்லையா, என்ன?
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ, சொல்லடி சிவ சக்தி! ........பாரதியார்.
பிரம்மன் கணக்கு சில நேரங்களில் இப்படித்தான் தவறி விடுகிறது. சரியான அரவணைப்பும், ஆதரவும், வழிகாட்டுதலும் இருந்திருந்தால் இவர் இசை இன்பத்தில் திளைத்து கஞ்சாவை மெல்ல மெல்ல குறைத்திருக்கலாம்.
யார் இவர்? மேலும் அறிய ஆசை.
கலையரசி தாண்டவமாடினாலே பல தீய ஒழுக்கங்களும் அவளது சகோதரியின் மூலம் கொடுத்து விட்டுடுவாளோ? இம்மாதிரி நிறைய பேரு இருப்பாங்க சென்னையில். ஒழுக்கம் இல்லைன்னா, எவ்வளவு திறமை இருந்தாலும் இது தான் நிலை. இதுக்காக கஞ்சாவை வாய்க்கு வந்தபடி வசை பாட வருவோரே, ஒரு நிமிஷம் யோசியுங்கள், தவறு கஞ்சாவிலா, இல்லை அந்தோணியிடமா என்று. அதே ஒப்பீட்டை பலர் சாடும் டாஸ்மாக்கிற்கும் பொருந்தும்.