• ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை?
  • அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு
  • சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
  • பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
22 May, 2013
எந்த சகோதிரியும் அழுக்குத் துணியை பயன்படுத்தக் கூடாது!

பெண்களுக்கான சானிடரி நாப்கின் அடிமட்ட ஏழைப் பெண்களுக்கும் போய்ச்சேரும் அற்புதத்தை நிகழ்த்தியவர் முருகானந்தம். ஆனால், இதற்கு இவர் கொடுத்த விலை... நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அவருடைய வார்த்தைகளிலேயே படிப்போம்!

 'என் ஊர் பாப்பநாயக்கன்புதூர். அப்பா நெசவுத் தொழிலாளி. அம்மா விவசாயக் கூலி. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. திடீர்னு ஒருநாள் அப்பா இறந்துட்டார். குடும்பமே இடிஞ்சு போயிடுச்சு. வீட்டின் வறுமையைப் போக்க கிரில் பட்டறைக்குப் போனேன். அங்க புதுசு, புதுசா நிறைய முயற்சி பண்ணினேன். அம்மா வாசல்ல போடுற கோலத்தை வீட்டு ஜன்னல் ஆக்கினேன். இதனால, என் முதலாளிக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

ஆனா, எனக்கு ஒரு தொழில்லயே ரொம்ப நாள் ஒட்டாது. நான் கிளம்புறேன்னு சொன்னப்ப முதலாளி, 'நீயே இந்தக் கடையை வாங்கிக்கோ’னு சொல்லி பணத்துக்கு வழிகாட்டினார். கடையை எடுத்து நல்லாவே நடத்தினேன். எனக்குக் கல்யாணமும் ஆச்சு. ஒருநாள் என் மனைவி எதையோ மறைச்சி எடுத்துட்டுப் போனாங்க. என்னனு கேட்டப்ப, 'இது பொம்பளைங்க சமாச்சாரம்’னு சொல்லிட்டு விறுவிறுனு ஓடப் பார்த்தாங்க. நான் அவங்ககிட்ட இருந்து அதைப் பிடுங்கிப் பார்த்தா அழுக்கான துணி. 'ஏன் ஒரு நாப்கின் வாங்கக் கூடாதா?’னு மனைவியைத் திட்டினேன். அவங்களோ, 'அதுக்கு எல்லாம் செலவு பண்ணா குழந்தைக்குப் பால் வாங்க எங்க போவேன்’னு கேட்டாங்க. அதோட மட்டும் இல்லாம பெரும்பாலான கிராமப் பெண்கள் வசதி இல்லாததால இதுமாதிரி அழுக் குத் துணிகளைத்தான் பயன்படுத்துறாங்கனு அவங்க சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோயிட்டேன்.

அப்பதான் நாப்கினை நாமே தயாரிக்கலாமேனு எண்ணம் எழுந்துச்சு. கடையில ஒரு நாப்கினை வாங்கி, அதைப் பிரிச்சுப் பார்த்தேன். அதுல பஞ்சு மாதிரி ஒரு பொருள் இருந்துச்சு. உடனே பஞ்சை நல்லா அடைச்சு நாப்கின் தயாரிச்சேன். இதை யார்கிட்டே போய் சோதனை பண்ண முடியும். என் மனைவிகிட்ட போய் தயக்கமா நின்னேன். இப்படியே என்னோட சோதனைகள் தொடர்ந்தது. ஆனா, ஏகப்பட்ட ஏமாற்றம். ஒருகட்டத்துல என் மனைவிக்கு என் மேல ரொம்பக் கோபம்வந்து இந்த விஷயத்தை நிறுத்துங்கனு சொல்லி கண்டபடி திட்டிட்டாங்க.     வேற வழி இல்லாம நான் பக்கத்துல இருந்த மருத்துவக் கல்லூரி பெண்களிடம் என் ஆராய்ச்சியைச் சொல்லி உதவி கேட்டேன். பல பெண்கள் என்னை பைத்தியக்காரன் மாதிரி பார்த்துட்டு, திட்டினாங்க. சிலர் ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தாங்க. சில வாரங்களில் அவங்களாலும் தொடர்ந்து ஒத்துழைக்க முடியலை. வேற வழி இல்லாம என்னையே சோதனை எலியாக்க முடிவு பண்ணினேன்.

என் நண்பரின் கறிக் கடையில் இருந்து சூடான ரத்தத்தை வாங்கிட்டு வந்து இடுப்பில் ஃபுட்பால் பிளாடரில் நிரப்பிக்கிட்டேன். நடுவில சின்னக் குழாய் மூலமா நாப்கினை நோக்கி இணைச்சுக்கிட்டேன். பிளாடரை அழுத்தினா ரத்தம் நாப்கினில் விழும். இந்த நாப்கினுக்காகப் பலவிதமான பஞ்சுகளை வெச்சுப் பரிசோதிச் சேன். இந்தச் சோதனையில் என் வேட்டி எல்லாம் ரத்தம் கொட்டினது. ஒரு மணி நேரத்தில் தாங்க முடியாத நாற்றம் வரும். இதைப் பார்த்து எனக்கு ஏதோ பால்வினை நோய் இருக்குனு ஊர்ல தகவல் பரவிடுச்சு. என் மனைவி கோவிச்சுக்கிட்டு என்னைவிட்டு நிரந்தரமாப் பிரிஞ்சுப்போயிட்டாங்க!

சோதனைக்காக என் பட்டறையில் இருந்த கடைசி ஸ்கிராப் வரைக்கும் வித்துட்டேன். ஆனாலும், எனக்கு நம்பிக்கை மட்டும் போகலை. சில பெண்கள் உபயோகப்படுத்தின நாப்கின்களைச் சேகரிச்சு, அதை வீட்டுல காயவெச்சு சோதனை செஞ்சேன். என் அம்மா இதைப் பார்த்து எனக்கு யாரோ சூனியம் வெச்சுட்டாங்கனு தனியா போயிட்டாங்க. ஊர்க்காரங்க எல்லாம் சேர்ந்து என்னை ஊரைவிட்டு விலக்கிவெச்சுட்டாங்க.

கண்ணீரோட நான் என் கிராமத்தைவிட்டு கிளம்பினப்ப, என் கூடவந்த ஒரே ஜீவன் நான் வளர்த்த நாய் மட்டும்தான். அதோட கோவைக்கு கிளம்பி வந்துட்டேன். ரூம் பிடிச்சுத் தங்கி வெறும் பிரெட் மட்டும் சாப்பிட்டு ஓயாம உழைச்சேன். அப்புறம்தான் வெளிநாட்டு கம்பெனிக்காரன் பயன்படுத்தறது ஃபைன் மரப் பஞ்சுனு தெரிஞ்சுது. அதைக்கொண்டு நாப்கின் தயாரிக்கிற இயந்திரம் எட்டுக் கோடி ரூபாய் ஆகும்னு சொன்னாங்க.

நான் ஃபைன் மரப் பஞ்சை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி பண்ணினேன். சுமார் ஆறு மாசம் ரெண்டு மணி நேரம் மட்டுமே தூங்கி, கஷ்டப்பட்டு ஒரு இயந்திரத்தைத் தயாரிச்சுட்டேன். இதுக்கு 65 ஆயிரம் செலவாச்சு. இயந்திரத்தைத் தயாரிச்சு முடிச்சப்ப என் கையில் ஒரு பைசா இல்லை. சேமிப்பு, இருந்த சொச்ச சொத்து எல்லாத்தையும் இழந்துட்டேன். ஆனா, அதுல தயாரிச்ச ஒரு நாப்கினை ஒரு கல்லூரி பொண்ணு பயன்படுத்திட்டு, 'அண்ணா, இதை யூஸ் பண்ற மாதிரியே எனக்குத் தெரியலை. ரொம்ப வசதியா இருக்கு’னு சொன்னப்போ கதறி அழுதுட்டேன்.

அது என் பல வருஷக் கனவு. அதுக்காக நான் என் வாழ்க்கையையே இழந்திருக்கேன். தகவல் பரவி நிறையப் பேர் இந்த இயந்திரத்தைத் தயாரிக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க. நான் தயாரிச்ச இயந்திரம் மூலமாப் பெண்களே சுலபமா நாப்கினைத் தயாரிக்க முடியும். ஒரு நாப்கின் விலை ஒரு ரூபாய்தான். சமீபத்துல ஐ.ஐ.டி., 'சமூக மாற்றத்துக்கான சிறந்த கண்டுபிடிப்பு’ என் கண்டுபிடிப்பைத் தேர்வு செஞ்சது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ. இங்க எல்லாம் போய் சிறப்பு விருந்தினராகப் பேசி இருக்கேன். ரத்தன் டாடா, நாராயணமூர்த்தி ஆகியோரும் என் திட்டத்துக்கு உதவ முன்வந்து இருக்காங்க. என்னோட நோக்கம், இந்தியாவுல இருக்கிற அத்தனை ஏழைப் பொண்ணுங்களுக்கும் என் கண்டுபிடிப்பு போய் சேரணும். இனி எந்த சகோதரியும் மாதவிடாய் காலங்கள்ல அழுக்குத் துணியைப் பயன்படுத்தக் கூடாது...'' - அவர் பேசி முடித்தபோது எனக்குக் கண்கள் கலங்கி விட்டன!

- பூ.கொ.சரவணன்
படங்கள் : கே.ஆர்.வெங்கடேஸ்வரன்

COMMENT(S): 8

அடிப்படை சுகாதார விஷயத்தை சமூகத்தின் அடித்தட்டிலிருக்கும் பெண்களுக்கும் சாமான்ய விலையினில் கிடைக்கும் வகையில் பெற உழைத்திருக்கும் இந்த ஆணுக்கு மாதர்குல மாணிக்கங்கள் கொடுத்த வெகுமதி என்ன? இந்த கட்டுரைக்கு ஒரு பெண்மணி கூட ஆரோக்கியமான வகையில் பின்னூட்டமோ கருத்துப்பதிவோ செய்யவில்லை என்பது முகத்திலறையும் உண்மை. பெண்கள் சுயபச்சாதாபத்தின் மூலம் கிடைக்கும் சலுகைகளை எதிர்பார்க்கும் சுயநல கூட்டமாகவே எனக்கு படுகின்றது. இந்த லட்சணத்தில் முதல்வர் வேறு இலவச மாதவிடாய் பஞ்சுகளை அரசு இலவசமாக பெண்களுக்கு வழங்கும் என்று அறிவித்திருக்கின்றார். வெட்கப்படவேண்டும் தமிழக பெண்டிர். இவரை உதாசீனப்படுத்திய குடும்பத்தினருடன் இவர் இணையவே வேண்டாம். தேவையில்லை இவருக்கு இது போன்ற குடும்ப உறவுகள்.

அற்புதம்யா. தொழிலில் ஜெயித்ததற்கு வாழ்த்துக்கள். ஆனால் சினிமா போல ஓவர் சென்டிமென்ட் காட்டியிருப்பதுதான் கொஞ்சம் இடிக்கிறது. மணி சொன்னது போல இன்டெர்னெட்டை உபயோகப் படுத்தியிருக்கலாம். ஆனால் நெட் பரவாததற்கு முந்தைய கால கட்டம் என்றால் சிரமம் தான்.

இந்த பஞ்சு சமாசாரத்தை நெட்டில் தேடியிருந்தால் கிடைத்திருக்குமே? எதற்கு இந்த மாதிரி சிரமப்பட வேணும்.

கோவையில் பெருமைக்கோர்வைசேர்த்த எங்கூர்க்காரர்ங்ணா..

மீன்டும் குடும்பத்துடன் இனைது வாழ வாழ்த்துக்கல்

You are really really great sir.

Displaying 1 - 6 of 6
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 23 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook