'தானே' துயர் துடைத்தோம்! நீங்கள் படித்த பள்ளிக்கூடத்துக்கு மகாத்மா காந்தி வந்திருக்கிறாரா? லால்பகதூர் சாஸ்திரி வந்திருக்கிறாரா? வினோபா பாவே அல்லது நேரு வந்துள்ளனரா? காமராஜர் அல்லது கக்கன் வந்தது உண்டா? இதில் யாராவது ஒருவர் வந்திருக்கலாம். ஆனால், இவர்களும் இவர்களைப் போன்ற தலைவர்களும் காலடித் தடம் பதித்த பள்ளி ஒன்று சிதம்பரம் பகுதியில் இருக்கிறது. அது.... 'சென்னை அரசாங்க நந்தனார் மாணவர் உயர்நிலைப் பள்ளி’! சுருக்கமாக, நெருக்கமாக எல்லார்க்கும் அது 'நந்தனார் பள்ளி’! உண்மையான பக்தி இருக்குமானால், அதற்கு எந்தத் தடையும் இருக்க முடியாது என்பதற்கு உதாரணமாக, நந்தி விலகி நந்தனாருக்கு நடராஜர் காட்சி தந்த இடம் சிதம்பரம். கலைக் கோயிலாக நடராஜர் சந்நிதியும் அறிவுக் கோயிலாக நந்தனார் பள்ளியும் இருக்கின்றன. 2016-ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் பெருமைகொண்ட பள்ளியைவிட, அதன் விடுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது! சுவாமி சகஜானந்தர் என்று அழைக்கப்படும் மனிதப் புனித ரால் தொடங்கப்பட்ட இந்தப். . .
COMMENT(S): 3
its really lovely to see such work has been done through Vikatan. Hats off....
நன்று....
well done vikatan,and all others responsible for this project.