சமச்சீர் முதல்வன்! சமச்சீர்க் கல்வி அமல்படுத்தப்பட்ட முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் மாநில முதல் மதிப்பெண் 500-க்கு 497. மொத்த மதிப்பெண் களில் ஜஸ்ட் மூன்றே மூன்று மதிப்பெண்கள்தான் குறைவு. நீதிமன்ற தாவா, அரசியல் விரோதங்களுக்கு இடையில் பள்ளி துவங்கி மூன்று மாதங்கள் வரை படிக்க பாடப் புத்தகங்கள் இல்லாமல் 'சும்மா’வே இருந்து, பிறகு படித்து இவ்வளவு மதிப்பெண்களைக் கொய்திருக்கிறார் ஸ்ரீநாத். தஞ்சா வூர் பொன்னையா ராமஜெயம் பப்ளிக் பள்ளி மாணவன். ''எந்த வாய்ப்பும் வெளிப்படையாக வராது. அது சவாலாகத்தான் வரும்னு படிச்சிருக்கேன். அது இப்போ நெஜம் ஆயிருச்சு'' - கண்ணாடியைச் சரி செய்துகொண்டே தெளிவாகப் பேசுகிறார் ஸ்ரீ. ''ஒன்பதாவதுல நான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். அப்பவே பத்தாவது பரீட்சைக்கு நிறைய பிளான் வெச்சிருந்தேன். என் திட்டப்படி அக்டோபர் மாசத்துக்குள்ள நான் மொத்த போர்ஷனையும் முடிச்சு, ரிவிஷனுக்குப் போயிருக்கணும். ஆனா, ஸ்கூல் ஆரம்பிச்சு முதல் மூணு மாசம் புக்கே கைக்கு வரலை.. . .
முதலில் வாழ்த்துகள். இங்கு வாழ்க்கைக் கல்வி பயிற்றுத்தருவதே இல்லை. அப்படியென்றால் என்ன என்று கேட்பார்கள். வெறும் புத்தக புழுக்கள். அறிவை உபயோகிக்கும் படியான எந்த படிப்பும் இல்லை. மாணாக்கர்களும் ஒரு உட்கருவை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்கிற மனோநிலை தான் உள்ளது. மாணவர்கள் மட்டுமே இதற்கு காரணம் அல்ல. பெற்றோர்கள், சமுதாயம், அரசாங்கம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்..... இந்த அவல நிலை மாற வேண்டும் அதற்கு 'விகடன்' போன்ற இதழ்களும் சமுதாய அக்கறையோடு உதவ வேண்டும்.....
497 பெற்றவருக்கும், 480 பெற்றவருக்கும் என்ன பெரிய வேறுபாடு? அறிவிலோ, அனுபவத்திலோ பெரிய வேறுபாடு ஏதுமில்லை. இவர்களைத் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவது ஒரு மாயையே. ஒரு தலைமுறைக்கு முன் நானும் பத்தாம் வகுப்பு தேர்வெழுதினேன். அந்த ஆண்டு ஆரம்பம் முதல் என் நண்பன் ஒருவனே முதலிடம் பெற்று வந்தான். நாங்கள் படித்த ஐந்து ஆண்டுகளுமே பெரும்பாலும் எல்லாத் தேர்வுகளிலும் அவனே முதலிடம் பெறுவான். ஆனால் எங்களுக்குள் வேறுபாடு ஒரு பத்து மதிப்பெண்களே இருக்கும். பொதுத்தேர்விற்கு ஒரு பத்து நாள் முன்பிருந்து நான் வீட்டிற்குள் முடங்கினேன். அடித்தது அதிர்ஷ்டம் - ஒரு மூன்று மதிப்பெண்கள் முன்னிலை பெற்று முதல் மாணவனாக வந்தேன். அப்படியானால் நான் எவ்விதத்தில் அவனை விட உயர்ந்து விட்டேன்?
சமச்சீர் கல்வியை அறிமுகப் படுத்திய முந்தைய ஆட்சிக்கு ஒரு பாராட்டோ அல்லது அதற்கு கூடிய அளவு முட்டுக்கட்டை போட்ட இந்த அரசுக்கு ஒரு கண்டனமோ இல்லாமல் இந்த கட்டுரை முடிவது விகடனுக்கு அழகல்ல.
அபிராமி அவர்களே! தமிழ் ஆர்வம் காரணமாக அமெரிக்காவில் படித்துவரும் தங்கள் மகனுக்கு தாய் மொழி பயிற்றுவிப்பதற்கு என் பாராட்டுகள். அந்த விஷயத்தை நீங்கள் தமிழிலேயே எங்களுக்கு தெரிவித்திருக்கலாம். நிறைவாக இருந்திருக்கும்.
My son is studying in US, and for the past 2 years i have been trying hard to teach him Tamil. My friend suggested me to use samacheer kalvi tamil book which is available online. Believe it or not, it is so simple and easy to understand for the kids, he liked reading it, Now he is able to read simple words like "kappal, padam, pattam" etc. just love the way they have created the book, attractive, informative and easy to learn.
but this time only matriculation students got the first 3 places becuase of this samaseer kalvi. this is because govt goverment aided school students couldn't competete with matriculation school students. Govt schools should improve to overcome this
COMMENT(S): 19
முதலில் வாழ்த்துகள். இங்கு வாழ்க்கைக் கல்வி பயிற்றுத்தருவதே இல்லை. அப்படியென்றால் என்ன என்று கேட்பார்கள். வெறும் புத்தக புழுக்கள். அறிவை உபயோகிக்கும் படியான எந்த படிப்பும் இல்லை. மாணாக்கர்களும் ஒரு உட்கருவை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்கிற மனோநிலை தான் உள்ளது. மாணவர்கள் மட்டுமே இதற்கு காரணம் அல்ல. பெற்றோர்கள், சமுதாயம், அரசாங்கம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்..... இந்த அவல நிலை மாற வேண்டும் அதற்கு 'விகடன்' போன்ற இதழ்களும் சமுதாய அக்கறையோடு உதவ வேண்டும்.....
நச் நச் நச்.
497 பெற்றவருக்கும், 480 பெற்றவருக்கும் என்ன பெரிய வேறுபாடு? அறிவிலோ, அனுபவத்திலோ பெரிய வேறுபாடு ஏதுமில்லை. இவர்களைத் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவது ஒரு மாயையே. ஒரு தலைமுறைக்கு முன் நானும் பத்தாம் வகுப்பு தேர்வெழுதினேன். அந்த ஆண்டு ஆரம்பம் முதல் என் நண்பன் ஒருவனே முதலிடம் பெற்று வந்தான். நாங்கள் படித்த ஐந்து ஆண்டுகளுமே பெரும்பாலும் எல்லாத் தேர்வுகளிலும் அவனே முதலிடம் பெறுவான். ஆனால் எங்களுக்குள் வேறுபாடு ஒரு பத்து மதிப்பெண்களே இருக்கும். பொதுத்தேர்விற்கு ஒரு பத்து நாள் முன்பிருந்து நான் வீட்டிற்குள் முடங்கினேன். அடித்தது அதிர்ஷ்டம் - ஒரு மூன்று மதிப்பெண்கள் முன்னிலை பெற்று முதல் மாணவனாக வந்தேன். அப்படியானால் நான் எவ்விதத்தில் அவனை விட உயர்ந்து விட்டேன்?
தலைப்பு நல்லா இருக்கு!
ஸ்ரீநாத்துக்கு வாழ்த்துக்கள்!!
சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்துல மனப்பாடத்துக்கு வேலையே இல்லை. ஒரு தடவை புரிஞ்சுக்கிட்டோம்னா போதும். வருஷத்துல எப்போ பரீட்சை வெச்சாலும் கடகடன்னு எழுதிடலாம். - முதல்வருக்கு அனுப்புங்கள்....
சமச்சீர் கல்வியை அறிமுகப் படுத்திய முந்தைய ஆட்சிக்கு ஒரு பாராட்டோ அல்லது அதற்கு கூடிய அளவு முட்டுக்கட்டை போட்ட இந்த அரசுக்கு ஒரு கண்டனமோ இல்லாமல் இந்த கட்டுரை முடிவது விகடனுக்கு அழகல்ல.
super srinath. congratulations
அபிராமி அவர்களே! தமிழ் ஆர்வம் காரணமாக அமெரிக்காவில் படித்துவரும் தங்கள் மகனுக்கு தாய் மொழி பயிற்றுவிப்பதற்கு என் பாராட்டுகள். அந்த விஷயத்தை நீங்கள் தமிழிலேயே எங்களுக்கு தெரிவித்திருக்கலாம். நிறைவாக இருந்திருக்கும்.
சமச்சீர் கல்வியின் முதல் வெற்றிகனி....சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்...!
My son is studying in US, and for the past 2 years i have been trying hard to teach him Tamil. My friend suggested me to use samacheer kalvi tamil book which is available online. Believe it or not, it is so simple and easy to understand for the kids, he liked reading it, Now he is able to read simple words like "kappal, padam, pattam" etc. just love the way they have created the book, attractive, informative and easy to learn.
but this time only matriculation students got the first 3 places becuase of this samaseer kalvi. this is because govt goverment aided school students couldn't competete with matriculation school students. Govt schools should improve to overcome this
இந்த மாணவனின் வெற்றி சமச்சீர் கல்விக்கு கிடைத்த வெற்றியாகவும் கொள்ளலாம்......
வாழ்த்துகள், ஸ்ரீ! பப்ளிக் பள்ளி மாணவன்னு மேல செய்தி, கடைசியா மெட்ரிக் பள்ளின்னு சொல்றீங்க? எது சரி?
congratulations.