• ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை?
  • அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு
  • சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
  • பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
22 May, 2013
என் மகளைக் கொன்றுவிடுங்கள்!
என் மகளைக் கொன்றுவிடுங்கள்! தங்கள் குழந்தை கருவில் இருக்கும்போது அடிவயிற்றில் உதைப்பதை  அணுஅணுவாக ரசிக்காத தாய் இருக்க முடியாது. ஆனால், ஒரு தாயே தன் குழந்தையைக் 'கருணைக் கொலை செய்துவிடுங்கள்’ என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கைவைப்பது எத்தனை துரதிர்ஷ்டவசமானது?  ஈரோடு, சூரம்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி - ஜெயா தம்பதி தான் இப்படி ஒரு இதயம் உறையும் கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். இந்தத் தம்பதிக்கு மதுமிதா, மித்ரா என இரு பெண் குழந்தைகள். இதில் கடைக்குட்டி மித்ரா எல்.கே.ஜி. படிக்கிறார். ஆனால், மூத்த மகள் மதுமிதாவுக்கு 14 வயதானபோதும் இன்னும் அவர் பச்சைக் குழந்தைதான். மதுமிதாவின் தாய் ஜெயாவிடம் பேசினேன். ''எங்களுக்குச் சொந்த ஊர் கும்பகோணம். பிறந்தப்பவே மதுமிதாவுக்கு மன வளர்ச்சி சரியில்லைனு தெரிஞ்சுடுச்சு. போகாத இடம் இல்லை; பார்க்காத வைத்தியம் இல்லை. எங்க வீட்டுக்காரர் தச்சுத் தொழிலாளி. எங்க வருமானத்தை வெச்சுக்கிட்டு முடிஞ்ச வரைக்கும் போராடிப் பார்த்துட்டோம். ஒருகட்டத்துக்கு அப்புறம் மதுமிதாவைப் பராமரிக்குறது எங்களுக்குப். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 13

விகடன் ...உதவ காத்திருக்கிறோம். முகவரி தந்து உதவுங்கள்

சட்டம் ஒரு கழுதை என்பது சரியாகத்தான் இருக்கிரது. கருணைக்கொலைக்கு இடமில்லை. ஆனால் கருணா கொலை செய்திருக்கிராரே தமிழகத்தையே, அதற்கு இடமுள்ளது!

கடந்த வார விஜய் டிவி நீயா நானாவில் கருக்கலைப்பு பற்றிய தலைப்பில் வாதம் நடந்தது. அதில் இது போன்ற பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களின் துன்பங்களை புரிந்து கொள்ள முடிந்தது.

வெள்ளைக் காரர்கள் அப்படி இல்லை. அவர் களுக்கு ஒரு மன வளர்ச்சியற்ற குழந்தையைப் பராமரிக்க ... இங்கிலாந்து பி.எம்.டேவிட் கேமரானுக்கும் ஒரு குழந்தை இப்படி இருந்தது. அந்த குழந்தை இரண்டுவருடதிர்க்கு முன் இறந்தது. அப்படி ஒரு குழந்தை இருந்தும் அவர் முழு நேர அரசியளில் ஈடுபட்டு பி.எம் ஆனார். ஆனால் இந்தியாவிலோ, இப்படி பட்ட பெற்றோர்கள் படும் அவதை சொல்ல முடியாதவை. அதுவும் அந்த தாய் படும் துயரம் ... இது பற்றி விஜை டிவியின் நீயா நானாவில் வந்தது.

Pl inform her address and phone no. I want to help them.

குழந்தையின் நிலையை கண்டு பத்து நிமிடங்களல் கலங்கினால், பெற்றோர்களின் நிலையை கண்டு பத்து மனி நேரம் கலங்க வேண்டியதாகி விட்டது... இயற்கை தாயே இக்குழந்தையை அன்போடு ஏற்று கொள்வதையன்றி வேறு யாதொரு நல்வழியும் கிடையாது... அதிலும் குழந்தை மதுமிதாவை காணும் போது இதயம் மிக கனக்கிறது...

Father God have mercy on Madhumitha and her family.

டாக்டர் செந்தில்வேலன்....கூறி உள்ளது,ஏற்று கொள்ள கூடியதுதான்,இந்த தாய்க்கு மூன்று மாதமாக உதவி தொகை,தாமதம் ஆனது,மிகவும் கொடுமை,இவர் ந்ல்ல காப்பகத்தில் சேர்த்துவிட்டு,அடிக்கடி சென்று பார்த்து வரலாம்,இந்த தாயின் வேதனை விரைவில் தீரட்டும்....

மறுமையில் மதுமிதா சொர்க்கம் செல்வாள், அவள் இந்த பூவுலகிலேயே எல்லா கஷ்டங்களையும்,வேதனைகளையும் அடைந்துவிட்டாள். இவளை பார்ப்பது இவளின் பெற்றோரின் கடமையே. சமூகமும், அரசும் இவர்களுக்கு துணை மட்டுமே செய்ய வேண்டும், பண உதவி, மருத்துவ உதவி என்ற வகைகளில். மதுமிதாவுக்காக பாடுபடும் பெற்றோர்களின் பாவங்களும் கரைகின்றன. மீதமுள்ள நாள்களிலும் அவளை அழகிய முறையில் பார்த்துக்கொண்டு மதுமிதாவின் இந்த பிறப்பின் பாவங்கள கழுவி, மறுமையில் அழகிய ஒரு வாழ்வு அவர்களுக்காக காத்துகொண்டிருக்கிறது.
வெங்கி சொல்வதுபோல அவர்கள் இரண்டாவது பெண்ணுக்கு துரோகம் எல்லாம் செய்யவில்லை. இன்னும் கொஞ்சகாலத்துக்குப்பிறகு தங்கையும் அக்காவிற்காக பணிவிடைகள் செய்யும்போது அவளுக்கும் நன்மையாகும். மதுமிதாவை பராமரிப்பதன்மூலம் மிக எளிதில்
நன்மைகளை பெருக்கலாம்.

துயரங்களை இந்த ரீதியில் அணுகுங்கள். எதுவுமே துயரமில்லை. எந்த ஜீவனுக்கும் அதன் தாங்கும் சக்திக்கு மேலாக துயரங்கள் கொடுப்பதில்லை - குரான்.

வெங்கி... நீங்கள் குறிப்பிட்டது போன்ற 'அரசு காப்பகங்கள்' நம் மககளுக்கு கற்பனையில்தான் சாத்தியம்.மதுமிதாவைப் போன்றவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.கருணைகொலைக்கு கோர்ட் படி ஏறியதால் இந்தப் பெண்ணின் நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மதுமிதாவிற்கு உதவி செய்வது என்று அரசு முடிவெடுத்தால் இவரைப் போன்ற அனைவருக்கும் பாரபட்சமின்றி அவ்வுதவி அளிக்கப்படவேண்டும்.
இந்த மாதிரியான குழந்தைகளை பராமரிப்பதற்கு கற்பனைக்கெட்டாத மனித உழைப்பும்,பொறுமையும், நேரமும் தேவைப்படும்.காப்பகங்களில் விடப்படும் பெண்குழந்தைகள் பாலியில் ரீதியான பல சிக்கல்களை சந்திக்கிறார்கள் என்ப்து மறுபக்கம். அரசு இந்த குடும்பத்திற்கு பொருளாதார உதவியையும்,கம்யூனிட்டி பேஸ்டு ரீஃகேப் வசதிகளையும் செய்து தருவதே நமது சமூகத்திற்கு ஏற்ற நடைமுறையாகப் படுகிறது.

கெள்ரவமான ஒரு அடைமொழியுடன் பாதகம் விளைவித்தலை கருணைக்கொலை என்று கூறி கருணை எனும் சொல்லை எப்படி நாம் கேவலப்படுத்தப் போயிற்று.மனம் பதறுகிறது தாயே.உங்கள் வலி அறியாமல் வெளியிலிருந்து நாங்கள் எதுவேண்டுமானாலும் பேசலாம். ஆனாலும் நீங்கள் ஒரு தாய் என்பது நினைவில் இருத்துங்கள்.

அழுகிக்கொண்டு இருக்கும் இந்த சமுதாயத்தில் இப்படி ஒரு பெண் குழந்தை இருப்பது அதற்கே ஆபத்து. அந்த தாயின் முடிவே சரி.

கருணை கொலை - வாழ்வின் இறுதி கட்டத்தில் இருப்பவர்களுக்கு சில நேரங்களில் பரிந்துரைக்க படுகிறது. புற்று நோய், மூளை சாவு போன்ற சில காரணங்கள். ஆனால் இந்த பெண் சிறுமி. இது தாய், தன் சுயநலத்திற்காக (அப்படி இல்லை என தோன்றினாலும்) செய்ய வேண்டும் கொலையே! அது நம் நாட்டில், வசதி இன்மை காரணமாக இன்னமும் அதிகமாக தெரிகிறது. சிறகொடிந்த பறவை (அதனால் இரை தேட இயலாது போகும்), காலொடிந்த குதிரை போன்றவைகளை கொல்வது போல இல்லை. இந்த பெண் குணமடைய முடியாதுதான், அதற்காக அவரின் உயிரை பறிப்பது தவறே! அதற்கு அவளை பெற்ற தாயாருக்கும் உரிமை இல்லை.

மனிதாபிமானத்தோடு சமூகம் (அதான் அரசு) இந்த பெண்ணை போன்றவர்களை காப்பாற்ற வேண்டும். அவர்களை நல்ல முறையில் காப்பது - அரசின் (சமூகத்தின்) கடமையாகும்.

அந்த குழந்தையை சரியாக (புரபஷணலாக) கவனிக்க கூடிய நர்ஸூகள் இருக்கும் காப்பகத்தில் சேர்ப்பது நல்லது. இந்த பெற்றோர்கள், தனி மனிதர்களாய், அந்த பெண்ணை கவனித்து கொள்வது இயலாத காரியம். தியாகம் என்று அவர்கள் சொன்னாலும் (அதன் மூலம் தங்களை பற்றி உயர்வாக எண்ணி கொண்டாலும் - இந்த பெண்ணுக்காக தன்னோட வாழ்க்கையையே அர்பணித்த தியாகிப்பா என்று மற்றவர்களின் பாராட்டுக்காக செய்தாலும்), அது அந்த பெண்ணிற்கு இழைக்கும் இன்னம் ஒரு கொடுமையே! காப்பாகங்களில் வசதி இருக்கும், நவீன முறைகள் அமலில் இருக்கும், மருத்துவர்கள், நவீன உபகரணங்கள், தெரபி என்று கவனிப்புகள் இருக்கும். அது அந்த பெண்ணின் வலி போன்றவைகளை குறைத்து தினப்படி வாழ்க்கையை சற்று எளிதாக்கும்.

அத்துடன் இவர்கள் தங்கள் இரண்டாவது பெண்ணின் வளர்ச்சி, வாழ்க்கையை பணயம் வைப்பது அந்த இரண்டாவது பெண்ணிற்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.

அரசின் துணையோடு ஒரு நல்ல காப்பகத்தில் சேர்ப்பதுதான் சரியான தீர்வு. சுய லாபத்திற்காக கொல்வதோ அல்லது தங்களை 'தியாகிகளாக' நினைத்துகொண்டும் மற்ற குழந்தயின் வாழ்க்கையயும் வீணாக்குவதோ அல்ல.

Displaying 1 - 13 of 13
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 18 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook