இன்று... ஒன்று... நன்று!விகடன் வாசகர்களுக்கு, நித்யஸ்ரீ மகாதேவனின் அன்பு வணக்கங்கள்... நான் பாடிய பாடல்களுக்குக் காது கொடுத்திருப்பீங்க... இப்போ கொஞ்சம் என் பேச்சுக்கும் காது கொடுங்க. பக்திக்கு எந்த அளவு வாழ்க்கையில் இடம் கொடுக்கலாம்னு பேச ஆசை. மனசு ஒரு குரங்குனு சொன்னது அவ்வளவும் உண்மை. அதை நம் கட்டுப்பாட்டுல வெச்சுக்கலைன்னா, அதுபாட்டுக்கு தாவித் தாவிப் போய்க்கிட்டே இருக்கும். அந்த மாதிரியான சமயங்கள்லதான் கடவுள் அவசியம் தேவைப்படுறார். நமக்கு எல்லாமே அம்மாதான். அப்புறம் அண்ணா, அக்கா, தம்பினு வருவாங்க. பல ரத்த பந்தங்களையும் தாண்டி நண்பர்கள் கடைசி வரை கூட வருவாங்க. அப்படியான நல்ல உறவுகளைத் தக்கவெச்சுக்கிறதும் நட்பைப் பராமரிக்கிறதும் ஒரு கலை. அதில் 'இவர் பெர்ஃபெக்ட்’னு யாரையும் சொல்லிட முடியாது. அது தொடர்பா என் அனுபவங்களைப் பகிர்ந்துக்கிறேன். ஏழையோ, பணக்காரனோ... இந்தியனோ, அமெரிக்கனோ... எல்லாருமே சந்தோஷமா வாழத்தான் ஆசைப்படுவாங்க. நம்ம வாழ்க்கையில் அந்த சந்தோஷம் ஏழு கடல் கள், ஏழு குகைகள். . .
COMMENT(S):