• கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
  • காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி
  • சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு
  • கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம்
  • தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக காங். தலைவருக்கு, திருமாவளவன் கண்டனம்
  • குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு சென்னை டிராவல்ஸ் அதிபர் தற்கொலை
  • லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது
  • கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண்
21 May, 2013
சறுக்கல் சிங்!
சறுக்கல் சிங்! 'என்னைப் பார்... என் சாதனையைப் பார்!’ என்று தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களை உடன் வைத்துக்கொண்டு மன்மோகன் சிங் ஓர் அறிக்கை வெளியிட்ட ஒரு வாரத்துக்குள், 'இதைப் பார்... இந்த அசிங்கத்தைப் பார்!’ என்று அவரது கூட்டுச் சகாக்கள் செய்த ஊழல் பட்டியலை அண்ணா ஹஜாரே குழு வெளியிட்டது. இதன் உச்சமாக, கடந்த 4-ம் தேதி பிரதமர் உள்ளிட்ட 15 மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை சோனியாவின் நம்பர் 10, ஜன்பத் இல்ல அலுவலகத்துக்கே நேரில் சென்று ஹஜாரே ஆட்கள் கொடுத்துவிட்டு வந்துவிட்டார்கள். நிதானமானவர் என்று இதுவரை நினைக்கப்பட்ட மன்மோகன் சிங், கடந்த திங்கள்கிழமை நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பெரும்புலம்பல் புலம்பிவிட்டார். ''என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடும் ஒரு கும்பல், இந்த அரசுக்கு எதிராகப் பொய்யையும் புரளியையும் பரப்பிவருகிறது. இதற்குக் கட்சிக்காரர்கள் பதிலடி கொடுக்க வேண்டும்’ என்பது சிங் கட்டளை. 'திக்குமுக்காடும். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 17

வெளி நாட்டில் இருக்கும் இந்தியப் பணத்தை 100 நாட்களில் கொண்டு வருவேன் என்று இவர் கூறியதை விட ஒரு பெரிய பொய்யை இதுவரை எந்த இந்திய அரசியல்வாதியும் கூறவில்லை!!! மூன்று படியரிசிப் பொய்யை விட இது பெரிய பொய்யாகும்!!!! அந்தச் சறுக்கலில் இருந்து இவர் மீளாததால் இவரது இரண்டாம் இன்னிங்ஸ் ரயில் இன்னும் தண்டவாளத்தில் ஏறவே இல்லை!!!

ஜவகர்லால் நேருவின் பரம்பரை எப்போதுமே ஒவ்வொரு குற்றத்துக்கும் ஒரு பலி ஆட்டை உருவாக்கி இருக்கிறது. அதிலும் இந்திராகாந்திக்கு பின் அது ஒரு சாதனையாகவே தொடர்கிறது. நரசிம்மராவின் சாதனைகள் அனைத்தும் அவரது கொள்கைகளை செயல்படுத்திய ஒரே காரணத்துக்காக இந்த மண்ணுமோகன் சாதனையாக காட்டப்பட்டு நரசிம்மராவ் ஒழிக்கப்பட்டார். அதேபோலவே 2ஜி விவகாரத்தில் ராஜா, ஆதர்ஷில் சவான், காமன்வெல்தில் கல்மாடி என பட்டியலிடலாம். இப்போது வெளிநாட்டு கள்ளப்பணத்துக்கு பிரணாப் தயாராக்கப்படுகிறார்.

ஃபினிஷிங் லைனுகே இவஙக ஆட்சில இருந்து விலகனும்..! து..!

இதையெல்லாம் படிக்க படிக்க மன்மோகன் சிங்கிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது! மக்களை திசை திருப்ப என்ன செய்யலாம் என்று யோசித்தவருக்கு ஒரு ஐடியா! நிலவுக்கும் சூரியனுக்கும் ஆள் அனுப்பலாம் என்று திடீரென்று அறிவித்தார்! நிலவுக்கு சரி, சூரியனில் ஐம்பது லட்சம் டிகிரி ஃபாரைந்ஹீட்டுக்கு சூடு இருக்குமே எப்படி போவீர்கள் என்று நாசா கேட்டது! அதற்கு மண்ணுமோகன் சிங், நாங்க ராத்திரியில ராக்கெட் விடுவோமே, அப்போ சூரியன் எப்படி இருக்கும் என்று நக்கலாக பதில் அளித்தார்!!!

மன்மோகன் சிங் மேல் இவ்வளவு பெறிய குற்றச்சாட்டை சொல்லத்தேவை இல்லை. இவர் காலத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்து இருக்கிரது. கடந்த 10 ஆண்டுகளின் இந்தியாவின் வளர்ச்சி சுதந்திரம் வாங்கி 50 ஆண்டுகளைவிட பல மடங்கு அதிகம். சிங் தனி மனிதனாக ஊழல் செய்யவில்லை. ஆனால் அவரின் கீழ் இருப்பவர்கள் ஊழல் செய்தால் இவருக்கு பொருப்பு இல்லையா ?. இப்பொதை இந்தியாவின் மோச நிலை பிரணாபால் வந்தது. மேலும் காங்கிரஸ் கிழங்களின் கட்சியாகிவிட்டது. மேலை நாடுகளில் ஆட்சிசெய்பவர்கள் சராசரி வயது 45க்குள்(ஒபாமா, கேமரன்..) இருக்கும். ஆனால் இந்தியவிலோ சராசரி வயது 70 ஆக இருக்கிரது. முக, அத்வானி, பிரணாப், மன்மோகன் சிங்,...ஏன் இன்னும் ரிட்டையர் ஆகவில்லை ?.

அப்பன் சொல்வது சரியென்ரு தெரிகிறது

சரி, இலக்கு... இலக்கு என்று மன்மோகன் சொல்வதுதான் என்ன? இந்தியாவையே இல்லாமல் ஆக்குவதா,அதுதானே இத்தாலியின் கனவு,அதை செயல்படுத்தி கொண்டு இருப்பவர் நம்ம ஜீ....

இவர் காலத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்து இருக்கிரது

Sorry Appan sir. It is not true. Please read recent statements from Azimji and Narayana Moorthy.

இந்த ஆள நம்பினா.. மொத்த இந்தியாவும் நடுத்தெருவுல பிச்சைதான் எடுக்கனும்.

இந்த காங்கிரஸ் அழிந்தால் தான் இந்தியா உருப்படும். காங்கிரஸ் உருப்பட்டால் இந்தியா அழியும்.

கடந்த 10 ஆண்டுகளின் இந்தியாவின் வளர்ச்சி சுதந்திரம் வாங்கி 50 ஆண்டுகளைவிட பல மடங்கு அதிகம். -- ஒரே பேத்தல்.. என்ன வளர்ச்சி.. உண்மையில் சொல்லப்போனால் வாஜ்பாயீ காலத்தில் செயல்படுத்த துவங்கிய திட்டங்களை கூட மக்களுக்கு ஒழுங்காக கொடுக்காமல் அதிலும் சம்பாதித்து வரும் கேவல அரசாகவே இது இருக்கிறது.

இது எல்லாமே காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தால் வந்த வினை!

மண்ணு மோகன்.......

'சரியான நபர் சரியான இடத்தில்' இருக்கும்வரை மட்டுமே முன்னெடுப்புகளும், முன்னேற்றங்களும் இருக்கும். நம்மில் பலரால் நகைச்சுவை கோமாளியாகப் பார்க்கப்பட்ட லாலுபிரசாத் யாதவால், உலகின் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமான, நட்டத்தில் போய்க்கொண்டிருந்த இந்திய தொடர்வண்டி நிறுவனத்தைத் தலைநிமிரச் செய்ய முடிந்தது எனில், அது அவரால் அவரது அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட குறுக்கீடற்ற நிர்வாகத்தால்தான். அதைப்போல, மன்மோகன் சிங் திறமையான பொருளாதார நிபுணர்; ஆக, அவரால் மிகச்சிறந்த நிர்வாகத்தை ஒரு நிதி அமைச்சராகத் தரமுடிந்தது. ஆனால் அவர் தலைமைப் பண்பு இல்லாதவர். அவரை பிரதமராக ஆக்கும்போது, இப்படித்தான் செயல்பட முடியும். ஏனெனில் அவர் இரண்டாம் இடத்திற்கு மட்டுமே சொந்தக்காரர். நம்மூரில் நாவலர் நெடுஞ்செழியனையோ, பேராசிரியன் அன்பழகனையோ முதல்வர் இருக்கையில் அமர்த்தியிருந்தால் நிர்வாகம் இப்படித்தான் இருந்திருக்கும். ஆக, மன்மோகனைக் குறைசொல்வதில் தீர்வு ஏதுமில்லை. அவரை அந்த நாற்காலிக்குத் தள்ளிய அறிவாளிகளின் அறிவீனமே இதற்குக் காரணம்.

Displaying 1 - 14 of 14
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 20 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook