மூன்றாம் உலகப் போர்
மூன்றாம் உலகப் போர் எமிலி பேட்டியில சொன்னது ஊருக்கெல்லாம் கேட்டுச்சோ இல்லையோ, ஊழல் தடுப்புக் கண்காணிப்புத் துறைக்குச் சத்தமாக் கேட்டுருச்சு. அரசாங்கமும் அதிகார வர்க்கமும், காடுகளையும் மலைகளையும் வெட்டி வெட்டித் திங்கிறாகன்னு எமிலி சொன்னது, நரம்புல ஊசி போட்ட மாதிரி அவுக உச்சந்தலையில ஏறிப்போச்சு. தீவிரமாக் கண்காணிச்சு எல்லா ஏற்பாடுகளையும் கையில வச்சுக்கிட்டுக் களத்துல இறங்கிட்டாக! முத்துமணி வீட்டுல என்னைக்கும் போலத்தான் விடிஞ்சது அன்னைக்கு ராத்திரியும். ஆறாம் மாசப் புள்ளத்தாச்சி மாதிரி லேசா வெளுக்குது கிழக்கு. டி.வி. பாத்துப் படுக்கிற ஊரு முந்தி மாதிரி எந்திரிக்குதில்ல. காக்கா, குருவி போட்ட சத்தத்துல தூங்குமூஞ்சி மரம் முழிச்சிருச்சு; ஊரு முழிக்கல. ''ஏ அஜய்... ரூப்... இன்னுமா தூங்கறீங்க? ஸ்கூல் இருக்குல்ல. எந்திரிங்க.'' லச்சுமிக்குத் தெரியும்... கத்துனா எந்திரிக்காதுக கழுதைக. கடைசியாத் தொடைய ஒரு நமண்டு நமண்டுனாத்தான் எந்திரிப்பா ரூப்கலா. காதுல சுண்டுவிரல்விட்டு ஒரு ஆட்டு ஆட்டுனாத்தான் எந்திரிப்பான் அஜய். அவுந்த குடுமிய அள்ளி. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
For New users
CLICK HERE to REGISTER FREE
COMMENT(S): 6
மிகவும் அருமையான தொடர். வைரமுத்துவின் தமிழை படிக்க படிக்க தமிழின் மேல் கொண்ட காதல் அதிகரிக்கிறது. வாழ்க தமிழ்
எந்த அமைச்சர் வீட்டில் "லாக்கர் சாவி" இப்படி மாட்டியதோ???
நிறைய ஆரய்ந்து எழுதுகிறார். நேரடியாக ரெய்டு பார்த்தது போல் இருந்தது
ஏதோ நானே இந்த ஆசாமிக்கு லஞ்சம் கொடுத்த மாதிரி மகிழ்ச்சியாக இருந்தது...
I finished in one breath. Very nice writing. Excellent.
ஒரு நல்ல படைப்பு.
எமிலியும் இஷிமோராவையும் என்ன பண்ணப் போகிறானோ இந்த முத்துமணி?