மிஸ்டு கால் இப்போதெல்லாம் நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு, மாப்பிள்ளை சார் பரிசுஅளிக்கும் முதல் பொருள், அநேகமாக செல்போன். 'வாழ்த்துகள், எங்கள் கோலா விளம்பர புரொமோவில் உங்கள் போன் 7,50,000 யூரோ ஜெயித்திருக்கிறது. உடனே, உங்களைப் பற்றிய விவரங்களைக் கீழ்க்கண்ட இ மெயிலுக்கு அனுப்பிவையுங்கள்’ என்று எஸ்.எம்.எஸ். வந்தபோது, நான் வளசரவாக்கம் கடை ஒன்றில், '200 ரூபாய்க்கு ஃபுல் டாக் டைம் கிடையாதாங்க?’ என்று விசாரித்துக்கொண்டு இருந்தேன். சாலிகிராமத்தின் அந்த பேச்சிலர்ஸ் அறையில் மொத்தம் ஐந்து பேர். அதில் அரவிந்தும் ஒருவன். அவன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அதில் எதுவும் பிரச்னை இல்லை. அவன் தன் காதலிக்கு வைத்திருக்கும் ரிங்டோன், 'பேசுகிறேன்... பேசுகிறேன்... உன் இதயம் பேசுகிறேன்’. எல்லோரும் தூங்கும் நடு இரவில்தான் அந்தப் பெண் இவனை அழைப்பாள். 'பேசுகிறேன்... பேசுகிறேன்...’ என்று செல்போன் அலறும். இவன் அடித்த இரண்டு பீருக்கு இதயம் என்ன... நுரையீரல், சிறுநீரகம் எல்லாம் சேர்ந்து வந்து பேசினால்கூட எழுந்திருக்கப்போவது. . .
இது எனக்கு புரியவே இல்லை. நாங்கள் இந்தியா வந்தபோது எல்லோருமே பேசிக்கொண்டிருக்கிறார்கள் அப்படி என்ன பேசுவார்கள். இங்கு பருவவயது வரை எஸ் எம் எஸ். அதன் பின் செல்போன் இருந்தாலும் எப்போதும் பேசுபவர்கள் மிக மிக குறைவு.
எனக்கும் கூட செல்போன் ஓசை சமயத்தில் கேட்காது. என் மகள் அடுத்த அறையிலிருந்து குரல் கொடுப்பாள். டாக்டர் காதில் மிஷின் போட்டுக்கோ என்கிறார் அபுதாலிப் அவர்களே.
COMMENT(S): 14
இது எனக்கு புரியவே இல்லை. நாங்கள் இந்தியா வந்தபோது எல்லோருமே பேசிக்கொண்டிருக்கிறார்கள் அப்படி என்ன பேசுவார்கள். இங்கு பருவவயது வரை எஸ் எம் எஸ். அதன் பின் செல்போன் இருந்தாலும் எப்போதும் பேசுபவர்கள் மிக மிக குறைவு.
நல்லாத் தானே எழுதியிருக்காரு? இதை ஏன் வேறொருவரின் நடையுடன் ஒப்பிட வேண்டும்??
i think this topic was written by raju marugan
எனக்கும் கூட செல்போன் ஓசை சமயத்தில் கேட்காது. என் மகள் அடுத்த அறையிலிருந்து குரல் கொடுப்பாள். டாக்டர் காதில் மிஷின் போட்டுக்கோ என்கிறார் அபுதாலிப் அவர்களே.
காஷ்மீர் விவரம் தவிர மற்றவை மொக்கையாக தெரியவில்லையா? குறைந்த பட்சம் இந்த பகுதியில் இரண்டு மொக்கை ஜோக்கையாவது போட்டிருக்கலாம். அந்த அளவுக்கு கொடுமை.
அஸ்சாமிலும், வெளி மானிலத்திலிருந்து கொன்டு வரும் ப்ரீ பெய்ட் கைப்பேசிகள் இயங்காது...போஸ்ட் பெய்ட் மட்டுதான்...
இது மொக்கை..
100 percent unmai.
" எவ்வளவு பேர் இருந்தாலும் நம் அலைபேசியின் அழைப்பு மணி நமக்குத் தெரிந்துவிடுகிறது "
இதில் நான் விதிவிலக்கு என்று நினைக்கிறேன். பலமுறை என் செல்போன் மணி அருகிலிருப்பவர்களாலேயே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த அழகில் நான் வைத்திருக்கும் காலர் ரிங்டோன் 'நீ பேசாவிட்டால் நானும் பேச மாட்டேன்..' என்ற விஜய் பாடல்..
பேசமாட்டேன்.. பேசமாட்டேன் என்று பாடிவிட்டு.. பேசாமலேயே இருந்துவிடுகிறாய் என்று நண்பர் ஒருவர் அடிக்கடி கடிந்து கொள்வார்.
பெரும்பாலும் பொதுஇடங்களில் மணி அடிக்கும்போதெல்லாம் கண்டிப்பாக நம் ஃபோனாக இருக்காது என்கிற ஒவர் கான்ஃபிடன்ட் தான் என்னை ஃபோனை எடுக்க விடுவதில்லை..
-அபுதாலிப் மலேசியா
nice article
" 'உன் இதயத்துகிட்ட பேசித்தான் தொலையேன்டா’ என்று உதைத்து எழுப்ப வேண்டியிருக்கும். "
செம கலாட்டா..
-அபுதாலிப் மலேசியா
காஷ்மீரில் செல்ஃபோன் சேவை பற்றிய செய்தி புதிது. நன்றி. ஆனால் மற்ற விஷயங்கள் பழசு. சுவாரசியம் சுமார் தான்.
செல்போன் நம் கூடவே இருக்கும் திராத வியாதி!!