மாமாவின் மரணமும் ஆயிரம் கவிதைகளும் நாகராஜ் வழக்கமாக மிஸ்டுகால்தான் தருவான். அதனால், இரண்டாவது ரிங் வரைக்கும் பார்த்துவிட்டுத்தான் எடுப்பதானால் எடுக்கலாம். அன்றைக்கு இரண்டாவது ரிங் தாண்டி மூன்றாவதற்குப் போய்விட்டது. இருந்தாலும் நாலாவது ரிங் வரைக்கும் பார்த்துவிட்டுத்தான் எடுத்தான் ரகு. எதிர்பார்த்த மாதிரியே விஷயம் சீரியஸானதுதான். நாகராஜின் அப்பா சடகோபன் மாமா காலையில் பள்ளியெழவில்லை. ஏற்கெனவே ஒரு வருடத்துக்கும் மேலாகப் படுத்துக்கிடப்பவர்தான். ரத்தம் சுண்டி, பளபளப்பெல்லாம் மறைந்து, என்புதோல் போர்த்திய கோலம்தான். இன்றைக்குக் காலையில் எழுந்துகொள்ளவில்லை. டாக்டர் வந்து பார்த்துவிட்டு கன்ஃபார்ம் செய்துவிட்டார் என்ற நாக ராஜிடம் 'வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு போனை வைத்தான். ''கோமாவா?'' என்று கேட்டார் கவுண்டர். ''இல்ல... இந்தவாட்டி போயிட்டார்!'' ''அது என்ன இந்தவாட்டி?'' என்று வழக்கம்போலப் புன்னகைத் தார் கவுண்டர். 'அதுவா..?’ என்று சொல்ல ஆரம்பித்தான் ரகு. இதே மாதிரிதான் போன மாதம் ஒருநாள் போன் மிஸ்ஸாகாமல் அடித்தது. இதே பல்லவிதான். காலையில் எழுந்துகொள்ளவில்லை. ஆஸ்பத்திரியில் போட்டிருக்கிறார்கள்.. . .
"க்ளைமாக்ஸ் செம ட்விஸ்ட்" என்ற கமெண்ட் பார்த்த பின் இதில் என்ன க்ளைமாக்ஸ் என்று முடிவை படித்தேன். கவுண்டரின் சிரிப்பு என்னையும் தொற்றிக்கொண்டது! அருமை, வெகு நாட்களுக்குப்பின் சுதேசமித்திரன் (சு)வாசித்தேன்.
COMMENT(S): 14
Very nice story
ரொம்ப நாள் கழிச்சு ஒரு கதை படிச்சேன். அதுவும் இப்படி மொக்க கதயாகி போச்சே.......
excellent one...
நல்ல அழகான கதை!
Yenna thaaaan solla varinga!!!
அருமையான முடிவு
படமெல்லாம் போர்.
எதார்த்தம்! எதார்த்தம்! நன்று...
ஒரு கணக்கு டீச்சருக்கு, கவிதைக்கும் குற்றச்சாட்டுக்கும் என்ன வித்தியாசம் தெரிந்துவிடப்போகிறது >>>
ம்ம்... நச்.
சமீப காலமாக சிறு கதைகள் சரியான அல்லது தரமான முடிவுடன் இருப்பதில்லை. தரம் வெகுவாகக் குறைந்து விட்டது.
"க்ளைமாக்ஸ் செம ட்விஸ்ட்" என்ற கமெண்ட் பார்த்த பின் இதில் என்ன க்ளைமாக்ஸ் என்று முடிவை படித்தேன். கவுண்டரின் சிரிப்பு என்னையும் தொற்றிக்கொண்டது! அருமை, வெகு நாட்களுக்குப்பின் சுதேசமித்திரன் (சு)வாசித்தேன்.
நல்ல முடிவு
நல்லதோர் முரண்கதை!
nice story again