வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
ஆயில்ய நட்சத்திரத்தை 'ஆச்லேஷா’ எனக் குறிப்பிடுகிறது வேதம். இது, கடக ராசியின் பிற்பகுதியில் பரவியிருக்கும். கடகத்துக்கு அதிபதி சந்திரன். அம்சகத்தில் குரு மற்றும் சனியுடன் தொடர்பு உண்டு. வளர்பிறையில் சுபனும் தேய்பிறையில் அசுபனுமாக தனது இயல்பை மாற்றிக்கொள்ளும். சந்திரனின் தொடர்பு, ஆயில்யம் நட்சத்திரத்தின் முதல், கடைசி பாதங்களில் (1,4) குருவும் இடைப்பட்ட இரண்டு பாதங்களில் (2,3) சனியுமாக இணைந்திருப்பதால், சிறு வயதிலும் முதுமையிலும் மகிழ்ச்சியும், இளமையில் இன்னல் கலந்த மகிழ்ச்சியுமாக இருக்கும் என்கிறது ஜோதிடம். மேஷம் முதல் கடகம் வரை நான்கு ராசியில் அஸ்வினி முதல் ஆயில்யம் வரை ஒன்பது நட்சத்திரங்கள் அடங்கிவிடும். சிம்மம் முதல் விருச்சிகம் வரை நான்கு ராசியில், மகம் முதல் கேட்டை வரை ஒன்பது நட்சத்திரங்கள் அடங்கிவிடும். தனுசு முதல் மீனம் வரை நான்கு ராசிகளில், மூலம் முதல் ரேவதி வரையிலான ஒன்பது நட்சத்திரங்கள் அடங்கிவிடும். ராசிச் சக்கரம், நான்கு ராசிகளை அடக்கிய மூன்று துண்டுகளாக இணைக்கப்பட்டுள்ளது. . .