நினைத்ததை நிறைவேற்றும்... 'திருப்புகழ்' திருத்தலங்கள்!
'வாக்குக்கு அருணகிரி; வாழ்க்கைக்கு திருப்புகழ்’ என சான்றோர் போற்றுவர். ஆமாம், சந்த கவிகளால் கந்தன் புகழ்பாடிய அருணகிரிநாதரின் திருப்புகழுக்கு அவ்வளவு சாந்நித்தியம். அதன் பாடல்கள் ஒவ்வொன்றும் நம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதுடன், சகல வளங்களையும் கைகூடச் செய்யும் என்பது ஆன்றோர்கள் பலரும் அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மை. தினமும் திருப்புகழ் பாடி முருகனை வழிபடுவதுடன், திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களைத் தரிசித்து வருவதாலும் அளவற்ற புண்ணியம் கிடைக்கும். தைப்பூசத்தையட்டி நாமும் சில திருப்புகழ் தலங்களைத் தரிசிக்கலாம். மயிலை சிங்காரவேலன் தரிசனம்! கயிலையே மயிலை எனப்போற்றப்படும் திருமயிலையில், ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயத்தின் தெற்குப் பிராகாரத்தில் அமைந்திருக்கிறது சிங்காரவேலர் சந்நிதி. ஆறு முகங்கள், பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில், மேற்கு நோக்கி சிங்காரவேலர் காட்சி தர, யானையின் மீது அமர்ந்தகோலத்தில் இருபுறமும். . .