கோவிந்தபுர கன்றுக்குட்டி!
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் அமைந்துள்ள திருவிடம் கோவிந்தபுரம். இங்கே காலடி வைத்ததுமே, ஒரு தெய்வீக அதிர்வு நம்மைப் பற்றிக்கொள்கிறது; நமது கவலைகளையும் பாவ மூட்டைகளையும் எவரோ சூட்சுமமாக வந்து வலியக் கவர்ந்து சென்றுவிட்டதுபோன்று, உடலும் உள்ளமும் இலவம்பஞ்சைவிட லேசாகிவிட்ட பரவசம் தொற்றிக்கொள்கிறது. காரணம்... இங்கே கனகம்பீரமாய் வானுயர்ந்து நிற்கும் விட்டல் ருக்மிணி ஆலயமும், ஜகத்குரு ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானமும்! காஞ்சி காமகோடி ஆசார்ய பரம்பரையில் 59-வது பீடாதிபதியாக விளங்கியவர், ஸ்ரீபகவந்நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (கி.பி. 1638-1692). 'நாம ஜபத்தின் மூலம் இறைவனை அடையலாம்... கஷ்டங்களைப் போக்கலாம்’ என்று, இறை நாம ஜபத்தின் மேன்மையை உலகுக்கு எடுத்துச் சொல்லி, அந்த எளிய வழிபாட்டை மேம்படுத்திய மகான் இவர். ஒரு காலகட்டத்தில், காவிரியின் வெள்ளப்பெருக்கால் கண்ணுக்குத். . .