முதல் இடம் விழுப்புரம்... இரண்டாவது விருதுநகர்
விழுப்புரமும் விருதுநகரும் வன்கொடுமை விவகாரத்தில் முதல் இடம் பெறுவது அந்த இரண்டு மாவட்டங்களுக்கும் பெருமை தரும் தகவல் அல்ல! தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பதற்காக 1989-ம் ஆண்டு, 'எஸ்.சி - எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. நாட்டின் 63-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் எஸ்.சி. - எஸ்.டி. சமூகத்தினருக்கு எதிராக நடந்த வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது எவிடென்ஸ் அமைப்பு. அதில் திரட்டிய தகவல்களை நம்மிடம் கொட்டினார்அந்த அமைப்பின் நிர்வாகி கதிர். ''கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டுதான் எஸ்.சி. - எஸ்.டி. மக்கள் மீது அதிகமான வன்கொடுமைத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இந்த ஆண்டில். . .