தூக்குக் கயிறில் மருதுபாண்டியன்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் இருக்கும் மேலைச்சிவபுரி மக்களுக்கு கடந்த 19.06.2009 அன்று கறுப்பு நாளாகவே விடிந்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன் என்பவர் சுகுமாரி, சரோஜா, பழனியப்பன், அழகன், கோபால் என்று அடுத்தடுத்து ஐந்து பேரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலைசெய்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்தார். அந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம், 'சாகும் வரையில் மருதுபாண்டியனை தூக்கில் இடவேண்டும்’ என்று, கடந்த 23-ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மேலைச்சிவபுரி கிராமத்துக்குச் சென்றோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் இப்போது அந்த ஊரில் இல்லை. மருதுவின் பெரியப்பா மகன் ராஜ்குமாரிடம் பேசினோம். ''எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து மருது இந்த ஊரிலேயே இல்லை. அவங்க அக்காவை கும்பகோணத்தில் கல்யாணம் செஞ்சு. . .