நேற்று லதா... நாளை புத்திசந்திரன்?
'பரபரவென உச்சிக்குச் செல்பவர்கள் திடீரென்று கீழே விழலாம்’ என்பதற்கு சமீபத்திய உதாரணம் லதா. திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவராக இருந்து கட்சியை ஆட்டிப் படைத்த லதா, இப்போது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்! லதா ராஜினாமா விவகாரம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசினோம். ''ராவணன் இந்த மண்டலத்தில் காலூன்ற ஆரம்பிச்ச நேரத்தில் ஒவ்வொரு ஏரியாவிலும் தனக்கு நெருக்கமாகவும், விசுவாசமாகவும் சிலரை உருவாக்கினார். அந்த விசுவாசிகள் மூலமாகத்தான் யாரும் ராவணனை அணுக முடியும். திருப்பூர் மாவட்டத்தில் ராவணனுக்கு மிகவும் நெருங்கிய, விசுவாசமான இடத்தில் லதா இருந்தார். கடந்த தி.மு.க. ஆட்சியில் இவங்க நட்புச்சங்கிலி மிகவும் நெருக்கமானது. அதனால், 'லதாம்மா மனசு வெச்சா சீட்டைப் பிடிச்சுடலாம்’னு கடந்த தேர்தல் நேரத்தில் ராவணன்கிட்ட சிபாரிசு வேண்டி இந்தம்மாவுக்குப் பின்னாடி சுத்தின நிர்வாகிங்க ஏராளம்.. . .