தவறி விழுந்தானா... தள்ளி விடப்பட்டானா?
கடந்த 19-ம் தேதி வியாழன் இரவு. உடுமலை அருகே உள்ள முண்டுவேலாம்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயியான மகாலிங்கம் என்பவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. ''உங்கள் மகன் கிருஷ்ணகுமாருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்!'' என்று, பள்ளி நிர்வாகத்தினர் தகவல் கொடுத்து இருக்கிறார்கள். உடனே, மகாலிங்கமும் அவர் மனைவி பாலா மணியும் மருத்துவமனைக்கு விரைந்தார்கள். ஆனால், அவர்கள் அங்கே பார்த்தது, கிருஷ்ணகுமாரின் உயிரற்ற உடலைத்தான்! உடுமலை - பல்லடம் சாலையில் ஏரிப் பாளையம் பகுதியில் உள்ளது ஆர்.கே.ஆர். மேல்நிலைப்பள்ளி. அதன் அருகிலேயே பள்ளி யின் விடுதி இருக்கிறது. அந்த விடுதிக்குள் ஓடி வந்தபோது படிக்கட்டில் கால்தவறி விழுந்து, சுவரில் தலை மோதியதால்தான் கிருஷ்ணகுமார் மரணம் அடைந்தார் என்கிறது பள்ளி நிர்வாகம். ஆனால், மகாலிங்கத்தின் உறவினர்கள். . .