எம்.சம்பத், வேலாயுதம்பாளையம். 'உ.பி. தேர்தலில் முதல் அல்லது இரண்டாவது இடத்தை காங்கிரஸ் பிடிக்கும் என்கிறாரே திக்விஜய் சிங்? முதல் இடம் வருவோம் என்று சொன்னால், ஜெயிக்கப்போகிறோம் என்று அர்த்தம். இரண்டாவது இடம் என்றால் தோற்கப்போகிறோம் என்று அர்த்தம். இரண்டையும் சொல்வதற்கு திக்விஜய் சிங் எதற்கு? 'ராகுல்தான் அடுத்த பிரதமர்’ என்று சொல்லி வரும் சிங், அவருக்கு வேட்டு வைப்பது மாதிரியான கருத்தை ஏன் சொன்னார் எனத் தெரியவில்லையே? கணேஷ்குமார், கும்பகோணம். மொழிப் போர்த் தியாகிகள் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் வட இந்தியப் பெண்மணி குஷ்பு பேசியது பற்றி...? இது, குஷ்புவின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. குமரகுரு, ராஜபாளையம். 'மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமாபாரதி உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடக் கூடாது. வெளி நபர் அவர்’ என்று ராகுல் சொல்வது ஏற்கத்தக்கதா? 'இத்தாலி சோனியா. . .