மரணம் தந்த கிழங்கு! பிரிட்டிஷ் கவர்னராகஇருந்த லார்ட் வேவல், 'பிரிட்டிஷ் ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தமையால் அதிகம் சாப்பிட்டுவிட்டார்கள். ஆகவேதான் பஞ்சம் வந்தது’ என்று புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்கினார். மக்களின் பட்டினிச் சாவைக்கூடப் பரிகாசம் செய்தது பிரிட்டிஷ் அரசு. 1806-ல் வேலூர் சிப்பாய் கலகத்துக்குப் பிறகு, சென்னை மாகாணம், கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்து, பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வந்தது. இதனால், தானியங்களின் விற்பனை பெருமளவில் சந்தைப்படுத்தப்பட்டது. உள்ளூர்ச் சந்தைகள் நலிவடைந்தன. தானிய உற்பத்தி குறைந்தாலும், பிரிட்டிஷ் அரசின் ஏற்றுமதி மட்டும் குறையவே இல்லை. இதனால் பதுக்கல் பரவலாகி, உணவுத் தானியங்களின் விலை கட்டுக்கடங்காமல் போனது. விவசாயிகள் விதை நெல்லை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அப்போது, ரிச்சர்ட் டெம்பிள் இந்திய அரசாங்கத்தின் பஞ்சக். . .