சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு # பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம் # மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக # ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம் # அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு # முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்புஆண் - பெண் பாலியல் உறவே சட்டப்பூர்வ திருமணம்: முஸ்லிம் பெண் வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு # அத்வானிக்கு முக்கியவத்தும் வழங்கினால் கூட்டணி: சொல்கிறார் சரத் யாதவ் # உத்தரகாண்ட்டில் தொடர் மழை: பத்ரிநாத் சென்ற சென்னை யாத்ரீகர்கள் 52 பேர் தவிப்பு #


Comment count69
save
print A+     A-
''நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!''

அன்பிற்கும் மதிப்பிற்கும் என்றும் உரிய ஐயா கலைஞர் அவர்களுக்கு...  வணங்கி மகிழ்கிறேன். உங்களுக்கு நான் வரைந்த இரண்டு கடிதங்களை 'முரசொலி’ இதழின் முதல் பக்கத்தில் வெளியிட்டு 'நன்றி’ மறந்த என்னை நயத்தகு நாகரிகத்துடன் 'வாழ்த்தி’ இருக்கிறீர்கள். பெருந்தலைவர் காமராஜருக்கு நினைவாலயம் எழுப்பிய உங்கள் பெருந்தன்மைக்கு இன்றும் என் நெஞ்சார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறேன். காமராஜர் பிறந்த நாளை மாநிலம் முழுவதும் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்த தங்கள் அரசியல் பகையற்ற அன்பின் விரிவை என்றும் நினைந்து, நெஞ்சம் நெகிழ்ந்து நன்றி மலர்களை உங்களுக்குக் காணிக்கையாக்குவேன். 'நான் கேட்காமலே எனக்கு மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் பதவியும், பாரதி விருதும் மனமுவந்து அளித்து என்னைத் தாங்கள் பெருமைப்படுத்தியதையும், வீடற்ற. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
mHn1 Years ago
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது தமிழருவி அவர்களே. நீங்கள் மு.க.வை வசைபாடுவதற்கு இந்த ஆதரவு. அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்தான். இதே அளவு விமர்சனத்தை நேர்மையோடு தற்போதைய ஆளுங்கட்சியை பற்றி கூறிப்பாரும். அப்பொழுது புரியும், மு.க.வே பரவாயில்லையே என்று.
Prakash1 Years ago
சந்துரு சொல்வது உண்மை.அறுபதுகளில் சென்னை கல்லூரிகளில் நிறய இலங்கை தமிழர்கள் படித்துகொண்டிருந்தார்கள்.அவர்களுக்கு எப்பவும் தமிழ்நாடு தமிழர்கள் என்றால் அவ்வளவு இளப்பம்.அவரகளிடம் அப்போதே ரேடியோ பேன் எல்லாம் இருக்கும்.இங்குள்ளவர்களுக்கு அதெல்லாம் அப்போது ஒரு கனவு
vinod1 Years ago
எனக்கு அடிக்கடி இந்த கவுண்டமணி வசனம் நினைவுக்கு வருகிறது... "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...."
Naval1 Years ago
Mr Venkatesan, are you alright?
Naval1 Years ago
Mr Siva, Can you explain for whom we have housing board flats? Are you saying he is not eligible to get a house in housing board for rental? Don’t act too smart Mr Siva.
Naval1 Years ago
Mr Albert, Mind your words. Have you seen he has got money for giving speech? don't talk
ARU1 Years ago
மு க விடம் ஒரு கேள்வி பதில்
கர்மவீரருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்,
அவருக்கு மனிமண்டபம் கட்டினேன்,காகம் உக்கார வெயிலில் சிலை வைத்தேன்,
திரு அம்பேத்காருக்கு என்ன செய்தீர்கள்,
அவருக்கும் சிலை வைத்தேன்,மன்டபம் கட்டினேன்,சட்ட கல்லூரிக்கு அவர் பெயர் வைத்தேன்,
அண்ணா ,பெரியார் கொள்கைகலுக்காக என்ன செய்தீர்கள்,
அவர்களுக்கும் சிலை வைத்தேன்,மண்டபம் கட்டினேன்,

அட பாவி,இதுவா அந்த மாபெரும் தலைவர்கள் உஙகளிடம் கேட்டது,
அனைவருக்கும் இலவச பொதுவான தரமான கல்வி,தாழ்த்தபடுத்த பட்ட மக்களுக்கு பொருளாதார முன்னேற்ரம்,நல்ல உடை உணவு,அல்லவா,

ஆனால் நீ (ங்கள் )
உஙக்ளை வரலாறு மன்னிக்காது,
பெரும் தலவர்களின் ஆன்மாவும் மன்னிக்காது,

நாமக்கல் கவி க்கு 50 ரூபாய் கொடுத்ததர்க்கே சொல்லி காட்டிய தலைவன் மு க,
ARU1 Years ago
யாருக்காவது வெரும் 10 ரூபாய் கொடுத்து விட்டாலே ,மாப்பிள்ளை இவர்தான்,அவர் போட்டு இருக்கும் சட்டை என்னுடயது என்ரு மானம் கெட வைக்கும் மதிகெட்ட மு க விடம் இருந்து பெற்ற வீட்டை அரசிடமே ஒப்படைத்து விட்டு நீங்கள் வேறு ஒரு வாடகை வீட்டிற்கு செல்வதே நல்லது,
Ilango1 Years ago
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்
பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.

இது தமிழ்மகள் அவ்வையாரின் தீர்ப்பு. நல்லவர் நட்பு, இரக்க குணம், கொடை கொடுக்கும் பண்பு பிறவியிலேயே வரவேண்டும். இடையில் வரவழைக்க முடியாது. கருணாநிதிக்கு இந்தப் பிறவிக் குணம் இல்லை. அவரிடம் பழிவாங்கும் போக்குத்தான் அதிகம். தமிழருவி மணியனை அவர் குடியிருந்து வீட்டில் இருந்து துரத்த கருணாநிதி எடுத்த முயற்சிகள் அவரது பழிவாங்கும் குணத்தையே காட்டுகிறது. அவரிடம் இரக்கம் அல்லது கண்ணோட்டம் இல்லை என்பதைக் காட்டுகிறது. இதனால்தான் வள்ளுவர் சொன்னார் "நுண்ணிய நுால்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்" என்றார். திருக்குறளுக்கு உரை எழுதினாலும் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை எழுப்பினாலும் பிறவிக் குணங்களான தயை, கொடை இல்லாவிட்டால் பயனில்லை. ஈழத்தமிழர் உரிமைக்காக இரண்டு முறை எனது பதவியைத் துறந்து இருக்கிறேன் இன்னொரு முறை பதவி இழக்கத் தயார் இல்லை என தமிழீழம் எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் சொன்னார். ஒரு இனத்தின் உரிமைக்காக இத்தனை முறைதான் பதவி துறக்கலாம் என்ற விதி ஏதாவது இருக்கிறதா? இப்போது பதவியும் குடையும் குஞ்சரமும் போய்விட்டதே? அப்போது பதவி துறந்திருந்தால் மீண்டும் பதவிக்கு வர ஒரு வாய்ப்பு இருந்தி்ருக்கும். கருணாநிதி நிறையச் சாதித்திருக்கிறார். ஆனால் அவைவிட நிறையச் செய்யாமலும் விட்டிருக்கிறார். செய்ய வேண்டியதைச் செய்யாமலும் செய்ய வேண்டாதவற்றை செய்தலும் கேடு தரும் என்பது வள்ளுவர் வாக்கு.
DEVARAJ1 Years ago
This is the time to write letters to JJ not to MK!
Siva1 Years ago
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
selvaraj1 Years ago
விவாதிக்க வேண்டிய கடிதம், கரித்துக்கள். ஈழத்துப் பிரச்சினையில் கலைஞரை குறை கூறுபவர்கள் இந்திய அரசியல் அமைப்பை அறியாதவர்கள். இலஙகை அரசிடன் கூட்டு சேர்ந்து பிரபாகரனை அழித்தது மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு அல்லது கட்சி. காங்கிரசுடன் கூட்டு சேர்ந்த்ததாலேயே இப்பிரச்சினைக்கு அவரை குறை கூறுவது தவறு. மற்றபடி பணம் பண்ணியதில் அவரின் குடும்பம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதுதான் உண்மை. இதற்கு சரியான தீர்வு "அவரும் அரசியலில் இருந்து ஒதுங்கி அவரது குடும்பத்தாரும் கட்சியிலிருந்த்து விலகி சரியானவ்ர்களிடம் கட்சி ஒப்படைக்கப்பட்டால் திமுகவை வீழ்த்த யாராலும் முடியாது.
Netrikkan basker1 Years ago
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, முகவரியே இல்லாத திருக்குவளை என்னும் சாதாரண கிராமச் சூழலில் வளர்ந்து, ஏழ்மையின் பிடியில் உழன்று, தன் அரிய முயற்சியாலும், அளப்பரிய ஆற்றலாலும், சோர்வறியா உழைப்பாலும், தமிழன்னை உறவாலும் புகழின் சிகரத்தை எட்டிய உங்கள் சாதனை என்றும் என் ஆராதனைக்கு உரியவை.
உங்கள் சந்தர்ப்பவாத சாகசங்களும், சொல் ஒன்று செயல் ஒன்றாக நீங்கள் நடத்தி வரும் அரசியல் நாடகங்களும், எண்ணற்ற தொண்டர்களின் வியர்வை நீரில் விருட்சமாக வளர்ந்த கழகத்தை உங்கள் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்ட சுயநலமும், அறம் பிறழ்ந்த அரசியலும் என்றும் என் நேர்மையான விமர்சனத்துக்கு உரியவை.

அருமை, கனத்த நெஞ்சத்துடன்,
Kailash1 Years ago
Its typical karuna style act . He always asks letter or note from the one who requests and then when they go against him he will release it . Even his age has not given him maturity and he behaves like a school student .
Chandru1 Years ago
எல்லாம் சரி.நல் வாழ்வில் இருந்தபோது,நம்மை,ஏன், தாங்கள்,உட்பட,தமிழ் நாட்டைச்சேர்ந்த, ஒருவரையும்,தமிழன் என்று,ஏற்றுக்கொள்ளாத,"ஈழம்" உண்மையானதல்ல......இலங்கைத்தமிழரை,இப்போதும், கனடாவில் சென்று பாருங்கள்..... அவர்களை மனிதர்கள் என்று, ஏற்றுக்கொள்வதே கடினம்..........மு.க.புரிந்து கொண்டார்.... எம்.ஜி.ஆரிடம்..பிரபாகரன்...பணம் பெற்றபோதே.........
Baskaran, USA1 Years ago
தமிழருவி மணியன் அவர்களே உமக்கு உண்மையில் தைரியம் இருந்தால் தவறுக்கு மேல் தவறு செய்யும் தற்போதைய முதல்வரை பற்றி ஒரு பக்க கட்டுரை எழுதும்.அதை விட்டுவிட்டு பதவில் இல்லதா ஒருவரிடம் உங்கள் வீரத்தை காண்பிப்பது செத்த பாம்பை அடிப்பதற்க்கு சமம்.
Kishore1 Years ago
நச்...
Sriram1 Years ago
மனசாட்சி என்று ஒன்று முகவிடம் கிடையாது! மணியணின் கருத்துக்கள் மனசாட்சி உடையவர்க்கே உரியது! இந்தக் கடிதம் தகாத முறையில் (அதாவது முகவின் குணத்திற்குப் பொருந்தாதமுறையில்) எழுதப்பட்டுள்ளது!
Venkatesan1 Years ago
இவருக்கும் நாகேந்திரனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ரெண்டும் சோம்பேறிகள்.
Venkatesan1 Years ago
இவரைப் பற்றி அரசியலில் எல்லோருக்கும் தெரியும். இவரை பார்க்கும் போது ராமதாஸே எவ்வளவோ மேல். ஜால்ராவிற்கே வெட்கம் வரும் இவரை பார்த்தால். இவர் பேசுவது "ச்சீ..ச்சீ..இந்த பழம் புளிக்கும் ..கதை போல...
Jaleel1 Years ago
மணியன் அய்யா... நீங்கள் வாழும் காலம் வரை.. கட்டணமின்றி வாழ நான் வீடு தருகிறேன் அய்யா.. உங்களைப் போன்ற நேர்மையாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாமய்யா? இந்த சிறிய பேரையாவது எங்களுக்கு தாருங்கள் (விகடன் இந்த வேண்டுகோளை அய்யாவிடம் கொண்டு சேர்க்கவும்) மேலும் கருணா நிதியைப் போன்று எம் இனத்திற்கு கேடு செய்தவர்கள் யாருமிருக்க முடியாது..
Harish1 Years ago
போர்க் கருவி செய்வதற்காகச் சமைக்கப்பட்ட மண்டபம், போக மண்டபமாயிற்று. ஆத்திரம் கொண்டிருந்த மக்களின் நடுவே கூத்தர்கள் குடியேறினர். ஆரவாரமும் போர் முரசும் கேட்டுக்கொண்டிருந்த மாளிகையில் ராகமும் தாளமும் கேட்கத் தொடங்கிற்று

And DMK became a family business.
usha1 Years ago
அருமையான கடிதம்.....ஆனாஆஆஆஆஆஅ,,,,வேஸ்ட் அய்யா....வேஸ்ட்......
Rajesh1 Years ago
You can launch a mass movement like Hazare......
நிரஞ்1 Years ago
ஒரே செகண்டு தலைப்பை பார்த்து, அதிர்ச்சி. ஆனாலும் அடிமேல் அடி கலைஞருக்கு. பின்னிடிங போங்க.
நல்ல பஞ்ச் "ஒருவர் செய்த உதவியை நெஞ்சில் நிறுத்தி, அவர் பின்னாளில் செய்து முடித்த தவறுகள் அனைத்துக்கும் உடந்தையாக இருப்பதுதான் நன்றியின் நல் அடையாளம் என்று நீங்கள் நினைத்தால்"
  Displaying 1 - 25 of 69
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
29-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices