# தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count21
save
print A+     A-
பிரிக்ஸில் இருக்குமா இந்தியா?

இந்த உலகில் இப்போது அதிகாரத்தில் இருக்கும் தலைவர்​களில் மன்மோகன் சிங் அளவுக்கு பொருளாதார மேதை யாரும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் அரசியல் விமர்சகர்கள்தான், மன்மோகன் அளவுக்கு மோசமாக யாருமே செயல்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.  தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றிருக்கும் காங்கிரஸ் அரசு, உருப்படியாக என்ன செய்தது என்றுபார்த்​தால், உடனடியாக எதுவுமே நினைவில் வராது. ஒருவேளை நிறுத்தி நிதானமாக யோசித்தால், ஏதாவது கிடைக்கக்கூடும். அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிறையப் பிரச்னைகள். இதற்குக் காரணம் சூழ்நிலைகளா அல்லது அப்படிப்பட்ட சூழ்நிலைகளை உருவாக்கிய காங்கிரஸ் அரசா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும். ஒரு மசோதா தாக்கல் செய்யவேண்டும் என்றால், பிரதமர் மன்மோகன் சிங் மட்டும் மனது வைத்தால் போதாது. முதலில், சோனியா ஒப்புக்கொள்ள வேண்டும். அடுத்து, மன்மோகனின் அமைச்சரவை சகாக்களிடம். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Padmanabhan1 Years ago
ஊழலுக்கு காங்கிரஸ் தலைமுழுகுமோ அல்லது இந்தியா காங்கிரஸுக்கு தலைமுழுகுமோ எதாவது ஒன்று நடந்தால் தான் நல்லது.
Kumaran1 Years ago
ஊழல் காங்கிரஸை என்றைக்கு தலை முழுகுகிறோமா அன்றைக்குத்தான் இந்தியாவுக்கு விடிவுகாலம்.
Sriram1 Years ago
இன்றைய இந்தியாவுக்கு அமெரிக்காவின் தேர்தல் முறைதான் நல்லது. தலை சிறந்த் மக்கள் தொகை அதிகமுள்ள ஒரு குடுயரசுக்கு நாட்டின் தலைவரை நேரே மக்களே தேர்ந்தெடுக்கும் முறைதான் சிறப்பானது!
Ramanathan1 Years ago
காங்கிரஸின் 'நல்லாட்சியில்' 2014 வரை இந்தியா ஒரு நாடாக இருக்கட்டும். பிறகு பார்க்கலாம் ப்ரிக்சில் இருக்கா, சுண்ணாம்பாகிறதா என்று.
Dr Venkatesh1 Years ago
This is a Pseudo government... run by Sonia with a puppet called Manmohan Singh...
Sathish1 Years ago
Weak father (Gandhi), weak nation. Poorly written constitution with vestigial structures (Presidency, Governorships). Executive branch controls selection
Em1 Years ago
" சசிதரூர் எம்.பி. சொன்னது​போல நாடாளுமன்ற முறையை மாற்றி ஜனாதிபதி ஆட்சி (நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுத்த எம்.பி-க்கள் பிரதமரைத் தேர்ந்தெடுக்காமல், மக்களே நேரடியாகத் தலைவரை தேர்ந்து எடுக்கும் 'அமெரிக்க’ முறை."- சசி தரூர் ஒரு பெரிய அறிவாளி- அவர் சொன்ன கருத்தை சிந்திக்கலாமா என்று ஒரு கேள்வி வேற! அந்த அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா என்னத்தைத்தான் செய்ய முடிந்தது முடிகிறது. ஒரு சிங்கிள் டீ குடிக்கறதுக்குள்ள அந்த ஆள் படற அவஸ்தயை அவரிடமோ, அவரோட சம்சாரத்துக்கிட்ட கேட்டா தெரியும். வந்துட்டான்க வழி சொல்றதுக்கு.
vs1 Years ago
தூங்கறவர எழுப்பலாம் - தூங்கறமாதிரி நடிப்பவறை எழுப்பமுடியுமா?
Sriram 1 Years ago
அமெரிக்காவில் என்னா வாழுது? 20% வேலைஇல்லா திண்டாட்டம்.

பால் காந்தி : உங்களுடைய இந்த கூற்றுக்கு ஏதாவது ப்ரூஃப் கொடுக்க முடியுமா? 20% வேலையில்லாத் திண்டாட்டம் என்னிக்கு அமெரிக்காவில் இருந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? போகிற போக்கில் ஏதாவது அடிச்சி விட்டுட்டு போயிடாதீங்க

ஸ்ரீராம்
பாஸ்டன்
vaikundamurthy1 Years ago
இதைத்தான் நான் ஏற்கனவே ஒரு கருத்து பதிவில் கூறியிருந்தேன். இந்த அரசின் மிகப்பெரிய தோல்வி முடிவு எடுக்கும் திறன் இல்லாமை. எந்தவிதமான கொள்கை முடிவுகளும் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன. ஏராளமான சட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இப்படியே நீடித்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிடும். ஏராளமான ஊழல்கள், முடிவெடுக்க முடியாத தலைமை, தீவிரவாத தாக்குதல்களை தடுக்க முடியாமை இவைதான் இந்த அரசின் சாதனைகள்.
deepika1 Years ago
பிரிக்ஸ் நாடுகளின் இருந்து இந்தியா வெளி யேறுமா என்பதை இப்போதே சொல்ல முடியாது .....

ஏம்பா பிரிக்ஸ் ல இருந்து இந்தியா வெளியேறிட்டா எல்லா பிரச்சனையும் தீர்ந்துரும்மா...

அய்யா சிங் அவர்களே...தலையாட்டி பொம்மையா இருந்தது போதும்.தைரியமா முடிவு எடுங்க.(முதல்ல தைரியமா பேசுங்க)
RadhaRangaraju1 Years ago
'வேற்றுமையில் ஒற்றுமை' என்று பீத்திக்கொண்டிருந்தோம்.அந்த வேற்றுமைகளாலும்,அவற்றை களையாமல் அந்த வேற்றுமைகளால் அரசியல் வளர்க்கும் காங்கிரஸின் தந்திரங்களுமே நம்மை காலை வாரி குழியில் தள்ள தயாராக விட்டன.
SIVASUBRAMANIAN1 Years ago
Shashi Taroor is ready with a instant solution to India's problems? V Karthikeyan must be joking.
Suresh1 Years ago
வெளி நாட்டுவாழ் இந்தியர்கள் சர்தாருக்கு நன்றி சொல்லனும். டாலர் விலை 55 ருபாய் நிலைக்கு வந்ததற்கு நன்றி. வெளிபடையா சொல்லனும்னா அடுத்த வருடம் விகடன் சாந்தா சில டாலர் குறைவும்.


எந்த ஊர்ல இருக்கீங்க.......ரூபாய் 55 க்கு போகவே இல்லை.....அத்தோடு ரூபாய் இப்போது 49 ஒரு டாலருக்கு...
Cavitha1 Years ago
மன்மோகன் பிரதமராக இருப்பது சோனியா குடும்பத்துக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இந்திய பெரும் முதலாளிகளுக்கும் நல்லது என்பதால் அவரை பெரும் அறிவாளியாக பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சித்தரிக்கின்றன. இந்திய பங்குச்சந்தைகளில் "கமாடிட்டி, ஃப்
Crap1 Years ago
கடந்த நவம்பர் மாதம் தொழில் உற்பத்தி ஓரளவுக்குச் சிறப்பாக இருந்தாலும், அக்டோபர் மாதத்தில் உற்பத்தி நெகட்டிவ் ஆனது >>>

அதெப்படி, அக்டோபர் மாதத்தில் உற்பத்தி நெகட்டிவாக இருந்தாலும், நவம்பர் மாதத்தில் ஓரளவு சிறப்பாக இருக்க்கிறது என்றால் ஏன் வருத்தப்பட வேண்டும்?
Pal Gandhi1 Years ago
சசிதரூர் எம்.பி. சொன்னது​போல நாடாளுமன்ற முறையை மாற்றி ஜனாதிபதி ஆட்சி (நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுத்த எம்.பி-க்கள் பிரதமரைத் தேர்ந்தெடுக்காமல், மக்களே நேரடியாகத் தலைவரை தேர்ந்து எடுக்கும் 'அமெரிக்க’ முறை. அப்படி ஒருவரைத் தேர்வு செய்யும்போது கூட்டணி மற்றும் எதிர்க் கட்சிகளின் தொந்தரவு இல்லாமல் ஆட்சியை நடத்த முடியும்.) முறையைக் கொண்டு வரலாமா? ====================மள்ளு..... அமெரிக்காவில் என்னா வாழுது? 20% வேலைஇல்லா திண்டாட்டம். பணக்காரர்களிடம் வரிவிதிக்க 3 வருடமா படாத பாடு. டப்பா டான்ஸ் ஆட மாட்டேன் என்கிறது.
Pal Gandhi1 Years ago
வெளி நாட்டுவாழ் இந்தியர்கள் சர்தாருக்கு நன்றி சொல்லனும். டாலர் விலை 55 ருபாய் நிலைக்கு வந்ததற்கு நன்றி. வெளிபடையா சொல்லனும்னா அடுத்த வருடம் விகடன் சாந்தா சில டாலர் குறைவும்.
Suresh1 Years ago
There's no problem in the system per se. Parliamentary democratic system is fine. It's just the people who spoil the system. I would like to point out that our External Affairs minister read out someone else's speech in UN. Such is the quality of our politicians. Why blame the system????The same people will spoil american or any other kind of system. Change the people first then we talk about changing the system permanently.

We always thrive to underachieve,be irresponsible, be callous, be careless and whatnot. In any part of our country,integrity has no value in the system. In public sector, responsibility and accountability are alien words to Indians.

God save India!!!

அசோகன், சிங்கப்பூர்1 Years ago
இப்ப உள்ள அரசியலமைப்பு அரைவேக்காட்டு 'செங்கல்'தானே?...
திருச்சிக்காரன்1 Years ago
மன்மோகன் சிங் ஒரு சிறந்த அதிகாரி, அவ்வளவு தான். நாடாளும் தலைவர்களுக்கு உள்ள சாணக்கியத்தனம் இந்த அதிகாரியிடம் கிடையாது. அவரிடம் அதற்கு மேல் எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.


இதற்கு முன்பு ஒரு கருத்து விமர்சனமாக இதைத்தான் முன் வைத்திருந்தேன். முடிவெடுக்க முடியாத சூழல் உருவாகி வருகிறது என்று. சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் எஸ்.எம்.கிருஷ்ணா விவகாரத்தில் ஸ்டே கொடுத்தது, நீதித் துறை விழித்துக் கொண்டு விட்டது என்று தான் காட்டுகிறது. அமைச்சரவை கூடி மொத்தமும் முடிவெடுத்தால், அதற்குத் தலைவரான குடியரசு தலைவரையும், ஆளுனரையும் இதில் சேர்க்க வேண்டுமே... இது முடியவே போவதில்லை.

அரசுத்துறை முடிவுகள் எடுப்பதைப் பற்றி கையேடுகள் வேண்டும். எடுத்த முடிவுகளை நீதி மன்ற விசாரணக்கு உள்ளாக்குவதற்கு குடியரசுத்தலைவரிடம் தனிப்பட்ட அனுமதி பெற வேண்டும் என்ற வழிமுறைகள் வந்தால், வரும் காலத்தில் இந்தியாவை முன்னேற்றச் சிந்திக்கும் கூட்டம் தைரியமாக முடிவெடுக்க முடியும்.
Displaying 1 - 21 of 21
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
29-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices