ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150 ஓவியங்கள்: சேகர் வாசகிகள் பக்கம் நினைவிருக்கட்டும் நாமினேஷன் ! ஒரு நபரின் அநியாய அலட்சியம், விபத்து என்கிற பெயரில், இருபத்தியன்பதே வயதான என் கணவரின் உயிரை காவு வாங்கிவிட்டது. வாழ்க்கையை ஆரம்பிக்கக் காத்திருந்த நிலையிலேயே, அது முடிந்துவிட்ட கொடுமை ஒரு பக்கம் இருக்க, அதைத் தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்துக்கும் நான் அனுபவிக்கும் துயரங்கள், கொடுமையிலும் கொடுமை. குறிப்பாக, வங்கி சம்பந்தப்பட்ட சில நடைமுறைகள் நம்மை அதிக அலைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்குகின்றன. தன் வங்கிக் கணக்கில் 'நாமினி’ யார் என்று என் கணவர் குறிப்பிடாமல் விட்டது... இன்று பெரும் பிரச்னையாக இருக்கிறது. அதனால் அவருடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்வதில் அத்தனை சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். என் நிலை மற்றவர்களுக்கும். . .