கூத்தனாச்சி... ஒரு தெய்விக காதல் கதை !
பெருவாழ்வு வாழ்ந்து மரித்த நம் முன்னோர்களையே குலதெய்வங்களாக வழிபடுகிறோம். அப்படி ஒரு தெய்வம்தான், கூத்தனாச்சி! ஒரு வகையில் இவளை 'காட்டு ஆண்டாள்' என்றே அழைக்கலாம். ஆம்... ஆண்டாள் கண்ணனுக்கு உருகியது போலவே, தன் குலதெய்வமான கூத்தனை தன் மணாளனாக ஏற்று வணங்கியவள். கண்ணனைப் போல், கூத்தன் வரவில்லை கூத்தனாச்சியைக் கரம்பிடிக்க. இருந்தாலும், அவளுடைய காதல், அவளைத் தெய்வமாக்கிய கதை... மேகமலை எங்கும் தென்மேற்குப் பருவக் காற்றோடு கலந்து உலாவுகிறது! கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு அழகான அரணாக இருப்பது மேகமலை. காமய கவுண்டன்பட்டியிலிருந்து இந்த மலை அடிவாரத்துக்கு போகும் வழியில் உள்ள ஆறு, ஓடை, மலை, கரடு, பள்ளம், மேடு என அனைத்தும் கூத்தனாச்சி பெயரை சுமந்து நிற்க, காமயகவுண்டன் பட்டியிலிருந்து நான்காவது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள. . .