கால்களடி நீ எனக்கு...காந்தமடி நான உனக்கு !
தேவைக்கும் அதிகமான பணம், வசதியான வீடு, ஆடம்பர கார் என எல்லாம் இருந்தாலும், அன்பு இல்லாததால் எதுவும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் சில தம்பதிகள். ஆனால், இவை எதுவுமே இல்லை என்றாலும், அன்பு என்கிற ஒற்றை மந்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு, மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தும் கணவன் - மனைவிகள், காணக் கொடுத்து வைத்தவர்கள். அப்படி ஒரு தம்பதிதான், திண்டுக்கல்லைச் சேர்ந்த காமு - கிருஷ்ணன். தனது 18 வயதில், மாற்றுத்திறனாளியான தாய்மாமன் கிருஷ்ணனை கைப்பிடித்த காமு, உறவுகளின் கேலி, கிண்டல்களை புறம்தள்ளி, நடக்க முடியாத கணவருக்கு, கடந்த 35 ஆண்டுகளாக கால்களாக இருக்கிறார். இந்த 60 வயதிலும் குடும்பத்துக்காக உழைக்கிறார் கிருஷ்ணன். மூன்று பெண்கள், இரண்டு பையன்கள் என்று குழந்தைகள் பெற்று, அவர்களைக் கரையேற்றியிருக்கும் இவர்களின். . .