'சாதி வேணாம்... சனம் வேணாம்... சந்தோஷந்தேன் வேணும் !
இந்த 21-ம் நூற்றாண்டிலும் காதல் திருமணத்துக்கு எதிர்ப்புதான். அதிலும், சாதிவிட்டு சாதி மாறி கலப்புத் திருமணம் செய்து கொண்டால்... கேட்கவே தேவையில்லை. 'சாதி மாறிப் போனா, இடம் மாறிப் போ’ என ஒதுக்கி வைக்கும் சமூக அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு நடுவேயும்... தம் சாதியினரை எதிர்கொண்டு, சிறப்பான வாழ்க்கை வாழும் காதல் மற்றும் கலப்பு மண தம்பதிகள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்! அந்த வரிசையில், இந்த நூற்றாண்டின் அன்புப் புரட்சியாளர்களாக நிற்கிறார்கள் தேனி மாவட்டம், வேலப்பர் கோயிலைச் சேர்ந்த பெருமாள் - வனம் தம்பதி. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஊரை எதிர்த்து கலப்புத் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதி, இன்றுவரை இனிமை இல்லறம் நடத்தும் அழகு, காதலின் ஆசீர்வாதம்! ''காதல். . .