வாசகிகள் பக்கம் என் மகனுக்கும், கணவருக்குமான ஈகோ பிரச்னையில் நிம்மதி இழந்து நிற்கிறோம் நானும், என் மகளும். மகனுக்கு ஏழு வயது, மகளுக்கு இரண்டு வயது இருந்த சமயம்... வெளிநாட்டு வேலைக்குப் போனார் கணவர். இந்தப் பிரிவு எங்கள் அனைவருக்குமே தாங்க முடியாத துயரமாக இருந்தாலும், அன்றைய குடும்பச் சூழல் அந்த வேலையை ஒதுக்கும் தைரியத்தை எங்களுக்குத் தரவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு வார விடுமுறையில் வருவார். மற்றபடி, கடிதங்களும், தொலைபேசி அழைப்புகளுமே எங்களுக்குள் பாலமானது. குடும்பத் தலைவர் வீட்டில் இல்லாமல் வாழும், வளரும் சூழலை நானும் என் பெண்ணும் ஏற்றுக் கொண்டோம், புரிந்து கொண்டோம். ஆனால், என் பையன் வளர வளர, அப்பா மீது அவனுக்கு கோபமும் வளர்ந்தது. ''குடும்பத்தைவிட காசுதான் அவருக்குப் பெருசாயிருக்கா..?'' என்று. . .