இதோ...ஒரு காதல் சரணாலயம் !
''நீ ஒண்ணும் பயப்படாதே... சதீஷ் அண்ணாவும், பிரியா அண்ணியும் இருக்காங்க!'' - நாகர்கோவில் வட்டாரக் காதலர்களுக்கு திருமணத்துக்கான நம்பிக்கை மந்திரம் இதுதான். ஆம்... உண்மைக் காதலர்களுக்கு நல்ல அரணாகி, 'டும் டும் டும்’ கொட்டவைக்கிறார்கள், நாகர்கோவில் அருகிலுள்ள தாழக்குடி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் - பிரியா தம்பதி. ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இவர்களது இல்லம்தான், இப்போது காதல் ஜோடிகளின் சரணாலயம்! எங்கிருந்து விழுந்தது இதற்கு விதை? ''ப்ளஸ் டூ படிச்சப்போ, ரொம்ப அறிவாளியான ஒருத்தன் எனக்கு ஃப்ரெண்ட். ஒரு பொண்ணை உயிருக்கு உயிரா நேசிச்சான். இந்த விஷயம் எப்படியோ பொண்ணு வீட்டுக்குத் தெரிய, சின்ன வயசுலயே அவசர அவசரமா வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. அதில் இருந்து படிப்பு,. . .