முதல் வணக்கம் முதல்வனுக்கே!
தேசி விநாயகப் பிள்ளையார், கற்பகப் பிள்ளையார், கற்பக மூர்த்தி, கற்பக விநாயகர், வரத கணபதி, கற்பகக் களிறு, கணேசன், கணேசபுரேசன், மருதங்கூர் அரசு, மருதங்கூர் ஈசன்... இப்படி, 10 பெயர்கள் கொண்ட பிள்ளையார் ஒருவர் உண்டு. உலகப் புகழ் பெற்ற அந்த அழகு மூர்த்தி யார் தெரியுமா? பிள்ளையார்பட்டி பிள்ளையார்தான் அவர்! காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்துள்ளது பிள்ளையார்பட்டி. இந்த ஊருக்கு கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் ஆகிய பெயர்களும் உண்டு. இங்கு அருளும் விநாயகரின் திருக்கோலம், அற்புத அமைப்பாகும். பொதுவாக நான்கு திருக்கரங்களுடன் அருளும் விநாயகர், இங்கே இரண்டு கரங்களுடன், அங்குச-பாசம் இல்லாமல் காட்சி தருகிறார். தொந்தி வயிறு ஆசனத் தில் படியாமல்... அர்த்தபத்மாசனம் போன்று கால்களை மடித்துவைத்து அமர்ந்திருக்கிறார். இடக்கரத்தை கடி ஹஸ்தமாக இடையில் நாட்டி, வலக் கரத்தில் மோதகம் கொண்டு (இதனை சிவலிங்க மூர்த்தி என்று சிற்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்), வலது தந்தம் நீண்டும்,. . .