திங்கட்கிழமைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சோமவார விரதம், மார்கழி மாத திருவாதிரை விரதம், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வரும் மகாசிவராத்திரி, பங்குனி உத்திர திருநாளில்- உமாமகேஸ்வர விரதம், தைப்பூசத்தன்று பாசுபத விரதம், வைகாசி மாதம் பூர்வபட்ச அஷ்டமியன்று அஷ்டமி விரதம், தீபாவளியையட்டிய அமாவாசையில் கேதார விரதம் ஆகியன சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்! சிவராத்திரி விரதம் மகிமை மிக்கது. இது ஐவகைப்படும். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வருவதை, மாக சிவராத்திரி என்றும் மகா சிவராத்திரி என்றும் போற்றுவர். இதுதவிர, நித்ய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, யோக சிவராத்திரி, மாத சிவராத்திரி ஆகியன சிவ பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றன. சிவபெருமான் காலனை உதைத்தது, லிங்கோற்பவராக ஈசன் தோன்றியது, பரமனின் பாதியாக பார்வதி இடம் பிடித்தது, உமையவள், மகேசனிடம் ஆகம உபதேசம். . .