சலசலத்து ஓடுகிற நதியும் கரைக்கு அருகில் உள்ள வனமும் ரொம்பவே பிடித்துப்போனது பரத்வாஜ முனிவருக்கு! புராண காலத்தில் அந்த நதியை 'பாஹு நதி’ என்று அழைத்தார்கள். நதியின் பெருமையையும் அருகில் உள்ள வனத்தின் குளுமையையும் உணர்ந்த முனிவர், அங்கே தங்கி, ஸ்ரீராமரை பூஜிப்பது என முடிவு செய்தார். அழகிய ஸ்ரீராமபிரானின் விக்கிரகத் திருமேனி ஒன்றை உருவாக்கினார். ஆற்றில் நீராடிவிட்டு, தினமும் ஸ்ரீராம மந்திரம் சொல்லி, அந்த விக்கிரகத்தை வழிபட்டார். காற்று பலமாக வீசியதையும் மழை வேகமாகப் பெய்வதையும் அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. மாறாக, ராம நாமத்திலேயே மூழ்கிப் போனார். பக்தனுக்குக் கருணை காட்டுகிற இறைவன், பக்தியும் சிரத்தையுமாகத் தவம் செய்து, வேதங்களைக் கட்டிக்காக்கிற முனிவர்களிடமும் ஞானிகளிடமும் கருணை காட்டாமலா போய்விடுவார்?! ஒருநாள்... பரத்வாஜ முனிவரின் தவத்தில் மகிழ்ந்த. . .