தேவார மூவரும், புலவர்களும், சங்கீத மும்மூர்த்திகளும் சீர்காழி மூவரும், ஸ்தல புராணங்களையும் பெருமைகளையும் அற்புதமான ராகங்களில், அழகுறப் பாடியுள்ளனர். புத்தகங்கள் படித்தும் சொற்பொழிவுகள் கேட்டும் இவற்றை அறிவது ஒரு சுகம் எனில், அவற்றை இசையாக, பாடல்களாகக் கேட்பது பரமசுகம்! அதனால்தான், சென்னை மயிலாப்பூர் நாரத கனா சபாவினர், புனித க்ஷேத்திரங்கள் குறித்த ஓர் இசை நிகழ்ச்சியைத் தொடராக நடத்த முற்பட்டனர். மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று, க்ஷேத்திர சங்கீதம் எனும் தலைப்பில், தலங்கள் பற்றிய கச்சேரி நடத்த முடிவாகி, அந்தப் பாடல்களைப் பாடுவதற்கு பாடகி டாக்டர் விஜயலட்சுமியைத் தேர்வு செய்தனர். அதன்படி, காஞ்சிபுரம், திருவையாறு, திருவாரூர், மதுரை, சிதம்பரம், திருப்பதி, திருவான்மியூர், சென்னை, சிருங்கேரி, திருச்செந்தூர் ஆகிய தலங்கள் குறித்து அற்புதமாகப் பாடினார். பத்து மாதங்கள், பத்து. . .