பெண்களுக்கு கண்ணீர் குறைவு
வி.கே.லதா, கோயம்புத்தூர். வண்டி ஓட்டும்போது என் வலது கண்ணில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிகிறது. அதுவும் அடர்த்தியான கண்ணீராக இருக்கிறது. பார்ப்பவர்கள் நான் ஏதோ அழுதுகொண்டே வண்டி ஓட்டுவதாக நினைக்கின்றனர். தற்போது பவர் டெஸ்ட் செய்து கண்ணாடி அணிந்து இருக்கிறேன். டாக்டர், 'ரெஃப்ரெஷ் டியர்ஸ்’ போடும்படி சொன்னார். அப்படியும் பிரச்னை தீரவில்லை. என்ன செய்வது? அருள்மொழிவர்மன், கண் மருத்துவர், சென்னை. கண்ணீர் வருவதை எண்ணி நீங்கள் கண்ணீர்விடும் வேதனையை உணர முடிகிறது. உலகிலேயே கண்களில் அதிகம் வரக்கூடிய ஒரு பிரச்னை என்ன என்றால், கண்ணீர் வற்றி கண்கள் வறண்டுவிடுவதுதான். இதைத்தான் ஆங்கிலத்தில் 'டிரை ஐஸ்’ என்கிறோம். பொதுவாக, 50 வயதுக்கு மேல் கண்களில் கண்ணீரின் அளவு குறைந்துவிடும். அதுவும் ஆண்களைவிட, பெண்களுக்குக் கண்ணீரின் அளவு வெகுவாகக் குறையும். கண்களில் நீர் வற்றிப்போவதற்கு கண் இமைகளைச் சிமிட்டாமல் இருப்பதுதான் காரணம். வண்டி ஓட்டும்போது மட்டும் அல்ல... தொடர்ச்சியாக ஏ.சி-யில் இருப்பது, இடைவேளையே. . .