கால்களில் சக்கரத்தைக் கட்டியதுபோல் இயங்குகிறார் 53 வயதாகும் திருமதி கலா ஜெயராஜ். வீடு, வாசல் பெருக்குவதில் ஆரம்பித்து தண்ணீர் எடுப்பது, துணி துவைப்பது, காய்கறி வாங்குவது எனப் பரபரக்கிறார். 'ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத் தலைவிகள் இப்படித்தான் சுழல்கிறார்கள். இதில் கலா மட்டும் என்ன ஆச்சரியம்?’ என்றுதானே கேட்கிறீர்கள்... இருக்கிறது! மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில், கலாவின் இடது கால் எலும்புகள் நொறுங்கிவிட்டன. ஆனாலும், மனதளவில் நொறுங்கிப்போகாமல், தன்னம்பிக்கையோடு அவர் போராடி ஜெயித்த தைரியம்தான் எல்லோரையும் ஆச்சர்யத்தோடு பார்க்கவைத்திருக்கிறது. ''கடந்த 2008 நவம்பர் மாசம். என் மகனோட கல்யாணத்துக்கு ஒரு வாரமே இருந்த நிலையில், வீடே பரபரப்பா இருந்துச்சு. கல்யாணப் பத்திரிகை வைப்பதற்காக ஆவடிக்கு நானும் என் மகனும் பைக்கில் போனோம். திடீர்னு. . .