இது பொம்மை அல்ல... உண்மை!
பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் என்ன வித்தியாசம்? 'உலகமே ஒரு பொம்மை’ என நினைக்கிறார்கள் வயதானவர்கள். 'பொம்மைதான் உலகம்’ என நினைக்கிறது குழந்தை. அம்மாவுக்கு அடுத்து குழந்தைகள் அதிகம் நெருங்கிப் பழகுவது பொம்மைகளிடம்தான். பொம்மைகளைத் தன் தம்பி, தங்கைபோலவே பாவித்து ஒரு தனி உலகத்தில் குழந்தைகள் சஞ்சரிக்கின்றன. வெறும் பொழுதுபோக்கு மட்டும் இன்றி, குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் செயல்திறனைத் தூண்டுகின்ற போதி மரங்களாகவும் செயல்படுவது பொம்மைகள். ஆனால், சில நேரங்களில் பொம்மைகளே குழந்தைகளுக்கு ஆபத்தாகிவிடுவதும் உண்டு. இதுகுறித்து விளக்குகிறார் பெங்களூர் என்.ஆர்.சி.எல்.பி.ஐ (National Referral Centre for Lead Poisoning in India) ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் துப்பில் வெங்கடேஷ். ''குழந்தைகள் விளையாடும் பல விளையாட்டுப் பொருட்களில் லெட் எனப்படும் காரீயம் கலந்து இருக்கிறது. அதனால் என்ன என்கிறீர்களா? காரீயம் கலந்து இருக்கும் பெட்ரோலைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைச் சொன்னால் எளிதில் விளங்கும். கார், பஸ், லாரி ஆகியவை வெளியேற்றும் காரீயம். . .