பரபரப்பான சாலைகளில், சிக்னலைக் கண்டுகொள்ளாமல் சிட்டாய்ப் பறந்துவிடுவது, துப்பட்டாவைப் பறக்கவிட்டபடி அலட்சியமாய் ஓட்டுவது என இளம் பெண்கள் பலர் இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது ஆபத்தை உணராமல் அத்தனை விதிகளையும் மீறுகிறார்கள். விளைவு... ஆங்காங்கே விழுந்து புரளும் விபரீத விபத்துகள். ''சின்னச் சின்னக் காயங்கள், சிராய்ப்புகள்கூட உடல் அளவில் ஆறாத தழும்பையும் மனது அளவில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்'' என்கிறார் சென்னை விஜயா மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் பாபு நாராயணன். ''நமக்கு எதுவும் நடக்காது என்ற அலட்சியம்தான் விபத்து நடக்க முதல் காரணம். விபத்துக்கு உள்ளானவர்களைச் சந்திக்கும்போதோ அல்லது பாதிப்புக்கு உள்ளாகும்போதோதான் அலட்சியத்துக்கும் அவசரத்துக்கும் கொடுக்கும் விலையின் வலி புரியும்'' என்பவர், விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகள்பற்றி விளக்கினார். ''இரண்டு மாதங்களுக்கு முன் கல்லூரி மாணவிகள் இருவர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தார்கள். தலைக்கவசம் அணியாமல், இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றபோது திடீர். . .