'என் நண்பர் ஒருவர் வயிற்று வலியால் ரொம்பவே சிரமப்பட்டார். பல பரிசோதனைகளுக்குப் பிறகு நண்பரின் வயிற்றில் மெழுகு படிந்து இருந்ததை டாக்டர் கண்டுபிடித்தார். வயிற்றில் எப்படி மெழுகு? சிற்றுண்டிச் சாலைகளில் பயன்படுத்தும் பேப்பர் கப்களில் அடிக்கடி டீ, காபி குடிப்பது நண்பரின் வழக்கம். அந்த கப்களில் இருந்த மெழுகுதான் நண்பர் வயிற்றுக்கு இடம் மாறி வயிற்று வலிக்குக் காரணமாகி இருக்கிறது. சூடான டீ, காபி ஊற்றும்போது, கப் கரைந்துவிடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில் ஒருவித மெழுகு பூசப்படுகிறது. இப்படி மெழுகு பூசப்பட்ட பேப்பர் கப்களில் சூடான டீ அல்லது காபி நிரப்பப்படும்போது, அந்த வெப்பம் காரணமாக, பேப்பர் கப்களில் இருக்கும் மெழுகும் கூடவே கொஞ்சம் உருகி, டீ - காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள்ளும் சென்றுவிடுகிறது. அது நாளடைவில் வயிற்றில் பல உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. டீ, காபி அருந்துவதற்குக் கண்ணாடிக் குவளைகளே சிறந்தவை. சில்வர் டம்ளர்களையும் உபயோகிக்கலாம். . .