காக்க... காக்க >> காப்பீடு காக்க! தமிழக அரசின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்காக அரசு மருத்துவமனைகளில் 30 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகளை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் அமைய இருக்கின்றன. தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அனைத்து வசதிகளுடனும் இருக்குமாம் இந்த வார்டுகள். இதன் மூலம் வசூலிக்கப்படும் காப்பீடுத் தொகை, வார்டுகளைப் பராமரிக்கவும், மருத்துவமனையின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்படும். எஞ்சிய தொகை மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படுமாம். நல்ல கனவுகள் நனவாகும்! பேஷன் ஷோ >> குழந்தைகள் ஸ்பெஷல்! சென்னையில் ஃபேஷன் ஷோ நடைபெற்றது என்றால் அதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், நடைபெற்றது பேஸன் ஷோ (றிணீssவீஷீஸீ sலீஷீஷ்). இதில் கலந்துகொண்ட அத்தனை பேருமே குழந்தைகள். அதுவும் இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட குழந்தைகள். சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையும் ஐஸ்வர்யா. . .