அத்ரி மலை- மேற்கு மலைத்தொடரின் ஓர் அங்கமாக, மேகப் பொதி சுமந்து, வான்முட்டி நிற்கும் இந்த மலை.. தன் மேனியின் கற்களெல்லாம் லிங்கங்களாகவும், புற்களெல்லாம் மூலிகைகளாகவும் திகழ, தேவாதிதேவர்களும் முனிவர்களும் தினமும் தேடி வந்து தொழும் புண்ணிய மலையாக விளங்குகிறது! மாமுனிவர் அத்ரி தங்கியிருந்து தவமியற்றியதால், அவர் பெயரையே தன் பெயராகக் கொண்டு திகழ்கிறது, தென்னகத்தில் இந்த திருமலை! அத்ரி மட்டுமா? அகத்தியர், கோரக்கர் முதலாக இன்னும் பல மகரிஷிகளும் வந்து வணங்கிய திருவிடம் இது என்கிறார்கள் பக்தர்கள். 'அதுசரி... ஸ்ரீபரசுராமருக்கும் இந்த மலைக்கும் என்ன தொடர்பு?!’ நாம் கேட்டதும்தான் தாமதம்... ''என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்...'' என உரிமையுடன் கோபித்தபடி... நம்மை வழிநடத்திச் சென்ற நண்பர்கள், அத்ரி மலையின் மகத்துவத்தை, பரசுராமருக்கும் இந்தத் தலத்துக்குமான தொடர்பை விவரிக்க. . .
அத்ரி முனிவர் இராமயணத்திலும் இராமன், லெட்சுமணன், சீதைக்கு நல்லாசி வழங்கும் நிகழ்ச்சி உள்ளது. இராமன். லெட்சுமணன், சீதை
சித்ரகூடத்திலிருந்து, தண்டக வனம் செல்லும் வழியில் அமைந்த அத்ரி முனிவரின் இருப்பிடத்திற்கு வந்தனர். அத்ரி முனிவர் காமம், கோபம்,
மயக்கம் முதலிய குற்றங்களை களைந்தவர்.இராமாவதாரத்தின் இரகசியம்
தெறிந்தவர்.
அத்ரி முனிவர் தன்னை வணங்கிய இராமன் முதலிய மூவரையும் தம் செல்வங்களாகக் கருதி மகிழ்வு கொண்டு நல்லாசி அருளினார். முனிவரின் பத்தினி அனுசுயா சீதைக்கு அழகிய ஆடை, அணிகலன்கள், சந்தனம் அணிவித்து மகிழ்ந்தாள். சீதை தன் திருமண வைபவத்தை அனுசுயாவிடம் கூறி சந்தோஷம் அடைந்தாள்.
இராமச்சந்திர மூர்த்தியை ஆசிர்வதித்த பெருமை அத்ரி முனிவருக்கு உண்டு.
எல்.கண்ணன், சென்னை.