வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
பூரம் நட்சத்திரத்தை 'பூர்வ பல்குனி’ என்கிறது வேதம். சிம்ம ராசியில் நடுநாயகமாக விளங்கும் நட்சத்திரம் இது! ராசிக்கு அதிபதி சூரியன். நட்சத்திரத்தின் தேவதையும் 'அர்யமா’ என்ற புனைபெயரில் சூரியனாக அமைந்திருப்பது, அதன் தனிச்சிறப்பு. (பல்குனி நக்ஷத்திரம் அர்யமாதேவதா). சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய்- இந்த நால்வர் அம்சகத்தில் நான்கு பாதங்களில் இணைந்து பூரத்துக்குப் பெருமை சேர்க்கிறார்கள். பகுத்தறிவு, பொருளாதாரம், உற்சாகம், செல்வாக்கு ஆகிய நான்கும் நால்வரின் தொடர்பில் இருப்பதால், ஆணுடன் பூரம் இணையும்போது, தனிச் சிறப்பைப் பெற்றுவிடுகிறது. ஆண்மைக்கு உரிய ஆளுமை யைப் பெற்றிருப்பதால், 'பூரம் பிறந்த புருஷன்’ என்கிற சொல்வழக்கு உதயமானது. முதல் பாதம் 4-ஆம் பாதத் தில் இணைந்த சூரியனும் செவ்வாயும் ஆண்மையின் தரத்தை உயர்த்தி, பூரத்தின் பெருமையைப் பறைசாற்றுகின் றன. சூரியனும் செவ்வாயும் புருஷ கிரகம் என்கிறது ஜோதிடம். பிறந்தவனின் மனதில் கணக்கில் அடங்கா எண்ணக் குவியலின் வெளிப்பாட்டை வரையறுக்க, இருக்கும் ஒன்பது கிரகங்களில் உள்ளடக்கிய ரிஷிகளின். . .