'இந்தப் பயிற்சி மனசுக்கான மருந்து!'
தேரழகுத் திருவாரூரில், சக்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்துகிற மனவளக் கலை இலவச பயிற்சி முகாம், கடந்த 5.2.12 அன்று நடைபெற்றது. ''எத்தனையோ மருத்துவ வசதிகள் வந்துட்டாலும் மனசை அமைதிப்படுத்தறதுக்கும் உடலை திடப்படுத்திக்கறதுக்கு மான பயிற்சிகள் ரொம்ப அவசியம். அதை, இந்த மனவளக் கலைப் பயிற்சி தந்திருக்கு. மனசுக்கான மருந்து இதுதான்!’ என்றார் வாசகரும் அக்குபஞ்சர் மருத்துவருமான ராமகிருஷ்ணன். ''சக்தி விகடன்ல வெளியாகும் 'வாழ்க வளமுடன்’ தொடர்தான், இந்தப் பயிற்சியைக் கத்துக்கணுங்கற ஆர்வத்தைத் தூண்டுச்சு. இது நம்மூர்ல எப்ப நடக்கும்னு காத்துக்கிட்டிருந்தேன். இப்ப நிறைவேறிருச்சு'' என்று உற்சாகத்துடன் தெரிவித்தார் விஜயபுரம் வாசகி ஜெயலட்சுமி. ''நான் ஸ்கூல் வைச்சிருக்கேன். இந்த மனவளக் கலைப் பயிற்சியை, மாணவர்களுக்கு ஒரு வகுப்பாகவே வைத்துப் பயிற்சி கொடுக்கணும்னு தோணுது'' என்றார். . .