மண்ணியாற்றங்கரைக்கு அருகில் இருந்த அந்த வனப்பகுதியை யாருக்குத்தான் பிடிக்காது! முழுவதும் வேப்ப மரங்களால் சூழ்ந்த அந்த வனம், பச்சைக் குடைகள் நிறைந்த பிரதேசமெனக் காட்சி தந்தது. வேம்பின் நறுமணம் தெய்விக உணர்வைத் தூண்டிற்று. பச்சை நிறத்தில் காயாக இருந்து, மெள்ள மெள்ள மஞ்சள் நிறத்துக்கு மாறிய வேப்பம் பழங்கள், ஆற்றங்கரையில் இருந்து குளுமையும் வேகமுமாக வருகிற காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், பொலபொலவென தரையெங்கும் சிதறிக் கிடந்தன. சோழ தேசத்து மன்னர்கள் பலரும் சிவத்தொண்டில் ஈடுபட்டு வந்தார்கள். அதேபோல், அந்த மன்னனும் சதாசர்வ காலமும் சதாசிவத்தையே தொழுது, நமசிவாய நாமத்தையே நினைத்துக் கொண்டிருந்தான். ஒருநாள்... மண்ணி ஆற்றங்கரையில் உள்ள வேம்ப வனத்துக்கு வந்தான். அந்த நறுமணம், மன்னனுக்குள் தெய்விக அதிர்வலைகளை உண்டு பண்ணியது. ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து,. . .