சகோதரர் இக்பால் அவர்களே! இதுபோன்ற உங்கள் பதிலை எதிர்ப் பார்த்தேன்! ஏற்றுக் கொள்கிறேன்! அதேசமயம் எனது கருத்தை நீங்கள் மேளோட்டாமாகவே கவனித் திருக்கிறீர்கள்! ஒரு சமயம், பெருந்தலைவர் காமராஜ் அவர்களை நேரில் சந்தித்து, சிவாஜி கணேசன் எங்கள் ஊருக்கு பிரச்சாரம் செய்ய வருவதைப் பற்றிக் கேட்டபோது, முதலில் கல்லூரிப் பாடங்களில் கவனத்தை செலுத்து, மற்றதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்! அப்போது எங்கள் கட்சியில் அரிதாரங்களின் முக்கியத்துவம் அவ்வளவுதான்! அரிதாரங்கள் அவதாரங்களாக்கப் படவில்லை! எம்.ஜி.ஆரைக் கடவுளாக்கி, அவருக்குக் கோயில்கூட கட்டி வழி படுவது எதைக் காட்டுகிறது? நீங்கள் வேண்டுமானால் இதை ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகத்தெரியும். ஆனால் காலாகாலமாக அவரை கடவுளின் அவதாரம் என்ன கடவுளாகவே நினைக்கும் அளவுக்கு பாமர மக்கைள் மூலை சலவை செய்யப் பட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை! அதன் விளைவுகள்தானே இன்று அவதாரம் என்ன கடவுளாகவே ஆக்கப்பட்டு அவருக்கு கோயில் வேறுகட்டப்பட்டு, பூஜை புணஷ்காரங்கள், தீபாரதனைகள் நடைப் பெறுகின்றன!! இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்பது நிச்சயம்! உங்களை வைத்து இவைகளை சொல்லவில்லை! ஒன்றும் அறியாத ஆப்பாவி மக்களை வைத்துதான் சொல்லுகிறேன்! அன்று தீவிர சிவாஜி ரசிகர்களாக இருந்த எங்களைப் போன்ற லச்சோப லட்சம் பேர்கள் சிவாஜி இந்திரா காங்கிரஸ் சென்றுவிட்டப் பிறகு அவர் பின்னால் ஓடவில்லை! அவர் தனி கட்சி ஆரம்பித்தப் பிறகும் அவர் பின்னால் ஓடவில்லை! இவைகள்தான் அரிதாரங்களுக்கு நாங்கள் தந்த மதிப்பு!!
சிவாஜி கணேசன், பத்மினி, தங்கவேலு, மற்றும் பல துணை நடிகைகள் போன்ற அரிதாரம் பூசிய கூட்டத்தைக் காட்டி, காமராஜர் காலத்திலேயே காங்கிரஸ் கட்சியும் தனது பிரச்சாரத்தை செய்துள்ளது.!
சினிமா கவர்ச்சியன்றி அங்கே ஒரு புரட்சியும் கிடையாது புடலங்காவும் கிடையாது! தமிழக அரசியலில் அரிதாரங்களுக்கு அங்கிகாரம் அளித்ததின் அலங்கோலங்கள், அவலங்கள் தொடர்வதற்குக் காரணம், அந்த "அரிதாரங்களை" அவதாரங்களாக இன்றுவரை விளம்பரப் படுத்தித் துதிபாடிக் கொண்டிருக்கிற கூட்டங்கள்தான்!!!