# பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் #


Comment count2
save
print A+     A-
கலைமகள் அருள் தரும் சகலகலாவல்லி மாலை!

ஒரு முறை காசி யாத்திரைக்குச் சென்ற குமரகுருபரர், பெரியோர் பலருடன் அங்கு நடந்த சமய மாநாட்டில் கலந்து கொண்டார். அந்த தேசத்து முகமதிய மன்னனும் மாநாட்டுக்கு வந்திருந்தான். அவன், நமது வழிபாட்டு முறைகள்... இறை நம்பிக்கைகள் போன்றவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பி, தென்னாட்டில் இருந்து சென்றிருந்த சமயப் பெரியோர்களிடம் பலவாறான கேள்விகளைக் கேட்டானாம். அதுவும் எப்படி? ஹிந்துஸ்தானி மொழியில் கேட்டான்! மொழி புரியாது நம்மவர்கள் திகைக்க, அங்கிருந்த குமரகுருபரர் மன்னனது கேள்விகள் அனைத்துக்கும் தாமே மறுதினம் பதில் தருவதாகச் சொல்லிவிட்டு திரும்பினார். மன்னனிடம் அவகாசம் வாங்கியாகிவிட்டது. ஆனால் மறுதினம் ஹிந்துஸ்தானி மொழி தெரிந்து பேச வேண்டுமே? கலைமகளைச் சரணடைந்தார் குமரகுருபரர். ஸ்ரீமஹாசரஸ்வதி தேவியைக் குறித்து 'சகலகலாவல்லி மாலை’ எனும் போற்றிப் பாடல்களைப் பாடி வணங்கினார். தேவி சரஸ்வதியின் பரிபூரண அருளால், மறுதினம் மன்னனின் கேள்விகள் அனைத்துக்கும் ஹிந்துஸ்தானி மொழியிலேயே பதில் அளித்தார். இதனால் மிகவும் மகிழ்ந்த அந்த மன்னன், வேண்டியவற்றைக் கேட்கும்படி. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
ravi1 Years ago
அனைத்துப் பாடல்களையும் ப்ரசுரித்திருக்கலாமே....
Murugiah1 Years ago
இந்த பக்திவிகடன் இதழ் தேர்வில் வெற்றிக்கான உத்திகள் சொல்லும் இதழ். 'என் பண் கண்ட அளவில் பணியச்செய்வாய்' என குமரகுருபரர் சொல்லியது அவர் கற்றுப் பெற்ற அறிவாற்றலால் மன்னரும் அறிவுக்கு அடிமையானார் என பொருள் கொள்ளலாம். குமரகுருபரர் நிறுவியது காசிமடம் எனப் பெயர்பெற்று பல ஆன்மீகப் பணிகளுக்கு அடிகோலியது. பின்னர் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளுக்கு மாற்றப்பெற்று அங்கிருந்து அருளாட்சி நடத்தினர் பின்னர் வந்த மடாதிபதிகள். இதை நினைவுகூறும் பொருட்டு மடாதிபதியின் முன்னொட்டாக 'காசிவாசி' என்ற திருப்பெய்ரும் இணைக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கவர் ''காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் அடிகளார்''. கல்விக்கும், தமிழுக்கும், ஆன்மீகத்துக்கும் அரும்பணியாற்றியவர் சிவனடியில் கலந்த அருள்நதி அடிகளார். குமரகுருபரர் பிற்ந்து ஊர் திருவைகுண்டம். ஊமையாகப் பிறந்து பின்னர் செந்திலாண்டவன் அருளால் பேசும் திறன் பெற்றவர். அவர் முதலில் பாடியது செந்தூர் அறுமுகனைப் போற்றும் 'கந்தர் கலிவெண்பா'. அவரது 'மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்' தமிழ் சிற்றிலக்கியங்களில் சிறந்து விளங்குவது. மீனாட்சியமை பிள்ளைத் தமிழை (திருமலை நாயக்கா காலம்) அம்மை மீனாட்சியே குழந்தை வடிவில் வந்து கேட்டு இன்புற்று தன் முத்து மாலையை குமரகுருபரர்க்கு அணிவித்தாராம். சைவசிந்தாந்தத்திற்கு விளக்கமளித்த பெருந்தகையாளர்களுள் குமரகுருபரர்க்கு தனியிடம் உண்டு.
Displaying 1 - 2 of 2
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
06-மார்ச் -2012
சென்ற இதழ்
21-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices