வருங்கால வைப்பு நிதி: எல்லோருக்கும் பாஸ் புக்..!
இந்தியாவில் பி.எஃப். என்று சொல்லப்படுகிற பிராவிடன்ட் ஃபண்ட் மூலம் சுமார் ஐந்து கோடி பேர் பலன் அடைந்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் கூடிய விரைவில் பாஸ் புத்தகத்தைத் தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தப் போகிறது வருங்கால வைப்பு நிதியம் (இ.பி.எஃப்.). வருகிற ஏப்ரல் மாதம் முதல் இந்த பாஸ் புக் வழங்கப்படலாம் என்று தகவல். இந்த பாஸ் புக் வழங்கப்படுவதினால் பல நன்மை கிடைக்கும் என்கிறார்கள் பி.எஃப். அலுவலக அதிகாரிகள். அப்படி என்ன நன்மை கிடைக்கும் என்கிறீர்களா? ''ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் பி.எஃப். கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்று தெரிவதில்லை. சில நிறுவனங்கள் மட்டுமே ஆண்டுக்கொருமுறை பி.எஃப். கணக்கில் சேர்ந்திருக்கும் பணம் எவ்வளவு என்பதைச் சொல்கிறது. இந்த பாஸ் புக் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ஒருவரது பி.எஃப். கணக்கில் சேர்ந்திருக்கும் பணம் எவ்வளவு என எளிதாக தெரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் ஊழியரின் கணக்கில் சேரும். . .
PF department is India's worst department which always they give news like that..but will implemented after a decades..