ஞானம் தருவாள் ஞானாம்பிகை!
கோயில் நகரமாம் கும்பகோணத்தின் மடத்துத் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில். காசியில் வணங்கினால் என்ன பலன் கிடைக்குமோ.... கங்கையில் நீராடினால் என்ன புண்ணியம் பெறுவோமோ அதே புண்ணிய பலன்களைத் தருகிற ஒப்பற்ற திருத்தலம் இது! இங்கே ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீகாளஹஸ் தீஸ்வரர். அம்பாள் - ஸ்ரீஞானாம்பிகை. காவிரி மற்றும் அரசலாற்றுக்கு நடுவே உள்ள கோயில், ஐந்து கால பூஜைகளும் விசேஷமாக நடைபெறும் ஆலயம், மடத்துக் கோயில் என அனைவராலும் சிறப்பிக்கப்படும் இந்தத் தலத்தில், தினமும் உத்ஸவம் நடைபெறும். எனவே ஏகதின உத்ஸவக் கோயில் என்றும் போற்றுவார்கள். காஞ்சி மகா பெரியவா, கும்பகோணத்துக்கு வந்து தங்கியபோது, இங்கே வந்து தினமும் வழிபட்டதாகப் பெருமிதத்துடன் சொல்வர்! காளஹஸ்தியில் உள்ளது போலவே, இங்கும் உத்ஸவருக்கு மூன்று அம்பிகை மூர்த்தங்கள் உண்டு.. . .