''பள்ளியை இடிக்கப் போறாங்க..''
'பழைமை வாய்ந்த புரசைவாக்கம் எம்.சி.டி. முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை மூடப்பார்க்கிறார்கள். தமிழக அரசு மற்றும் கல்வித் துறை தலை யிட்டு அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்ற கோரிக்கையோடு, அந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 27-ம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். ''பள்ளியை ஏன் மூட வேண்டும்?'' உள்ளிருப்புப் போராட்டத்தில் இருந்த தமிழ் ஆசிரியர் ஞானசேகரிடம் கேட்டோம். ''1891 -ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தப் பள்ளியின் கீழ் மொத்தம் மூன்று பள்ளிகள் இருக்கின்றன. இதன் தாளாளராக இருந்த முத்தையா செட்டியார் 96-ல் இறந்த பிறகு, அந்தப் பொறுப்பில் பீகார் மாநிலத்துக்காரரான அவரது மருமகன் தருண் ராய் வந்து அமர்ந்தார். அவர் பள்ளியில் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், பணி இடங்களை. . .