''மலையை விட்டு விரட்டப் பார்க்குறாங்க!''
'திருப்பூர் மாவட்டம் உடுமலைதாலுக்காவில் உள்ள 18 மலைக் கிராமங்களுக்கும் எவ்விதமான அடிப்படை வசதிகளும் கிடைக்கவிடாமல் வனத்துறையினரும், அரசு அதிகாரிகளும் தடுக்கிறார்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) தகவல் வரவே, அந்த மலைப் பகுதிக்குச் சென்றோம். அந்தக் கிராமங்கள் வனத் துறையின் கண்காணிப்பில் உள்ளதால், புதியவர் உள்ளே நுழைய எளிதில் அனுமதி கிடைக்காது. அதனால், மலைவாழ் மக்கள் சிலரது உதவியுடன் பள்ளி ஆசிரியர் என்ற தோரணையில் உள்ளே சென்றோம். மாவடப்பு என்ற கிராமத்துக்கு எட்டு கிலோ மீட்டர் தூரம் கரடுமுரடான பாதையைக் கடந்து சென்றோம். மலைவாழ் மக்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் செல்வம், ''இந்த தாலுக்காவில் உள்ள 18 மலைக் கிராமங்களில் கிட்டத்தட்ட 1,000 குடும்பங்கள் உள்ளன. சுமார் 5,000 பேர் வசிக்கிறோம். இங்கு இருக்கும். . .