ஆங்கிலேயர்களால் 'குற்றப் பரம்பரையினர்’ என்று முத்திரை குத்தப்பட்ட பிரமலைக் கள்ளர் சமூகத்தாரை முன்னேற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் 'கள்ளர் பொது நிதி’. சுதந்திரத்துக்குப் பிறகு இது, 'கள்ளர் கல்விக் கழகம்’ என மாறி, இப்போது இதன் கட்டுப்பாட்டில் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரி உள்ளிட்ட ஏகப்பட்ட சொத்துகள் இருக்கின்றன. சொத்து என்றால் பிரச்னை இருக்க வேண்டுமே... 'அரசு உதவி பெறும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரியில் நிதி ஆளுமையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன. எனவே கல்லூரி நிர்வாகக் குழுவைக் கலைத்துவிட்டு, தனி அலுவலரை நியமனம் செய்து முறைப்படி விசாரணை நடத்த வேண்டும்’ என்று தமிழக முதல்வருக்கும் பதிவுத் துறை தலைவருக்கும் புகார் அனுப்பி இருக்கிறார் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளரும் உசிலம்பட்டி தொகுதி. . .