# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count25
save
print A+     A-
மிஸ்டர் கழுகு: உள்காய்ச்சல்!

''கோமதி சீனிவாசன் படத்தை எடுத்து வைத்துக்கொள்ளும்!'' - ஆபீஸ் வாசலில் இருந்து எஸ்.எம்.எஸ். தட்டியிருப்பார் போல, மெசேஜ் படித்து நிமிர்ந்தபோது, நம்முன் கழுகார் புன்னகையுடன் இருந்தார்.  ''கோமதி சீனிவாசனை இந்நாள் அரசியல்வாதிகள் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி​ விட்டது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில், கோமதி சீனிவாசனுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை திருச்சி நீதிமன்றம் விதித்​துள்ளது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் வலம் வந்த பெண் அமைச்சர்களில் ஒருவர், இந்தக் கோமதி சீனிவாசன். மொத்தம் நான்கு ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். 96 முதல் 2001 வரை எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக புகார் பதிவானது. அதில்தான், அவருக்கு மூன்று ஆண்டு மற்றும் நான்கு மாதங்கள். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
SK1 Years ago
>>''இந்தக் கூட்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்துள்ளது. 'கென்டகி கர்னல்’ என்ற பட்டம் பெற்ற மு.க.ஸ்டாலினை << "தங்கதாரகை" மாதிரி இதுவும் வாங்கப்பட்ட பட்டமா???
Sakthivelu1 Years ago
நிலச் சொந்தக்காரரை கண்ணீர் சிந்தவைக்கும் நில ஆக்கிரமிப்பின் கொடுமை பரிணாமம் புரிய ஆரம்பித்திருக்கிறது.
Neppoleon 1 Years ago
''கர்நாடக மாநில பி.ஜே.பி. அரசு அதைச் செய்யாது அல்லவா?'' ஊரில் எல்லோரும் பி.ஜெ.பி ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் கலந்து ஆறாக ஓடும் என்றல்லாவா பேசுகிறார்கள்.
Ramanathan1 Years ago
இப்போதாவது நடராசன் ஜெ பற்றிய இரகசியங்களையும், அவர் செய்த தில்லு-முல்லுகளையும் விளியிடுவாரா?
selvaperia1 Years ago
இதுவும் வேணும், இன்னும் இருக்கு நடரஜருக்கு! தன் மனைவியாலேயே இப்ப சரியான பாடம். ஆனால் ஒரு ஆறுதல், தன்னை சிறையில் அடைத்தவர்கள், சீக்கிரம் இதைவிட கடுமையான சிறைவாசத்தை எதிர்னோக்கி உள்ளார்கள் என்பதுதான்.
usha1 Years ago
கோமதிசீனிவாசன் இப்போ எங்க சார் இருக்காங்க....33லட்சத்துக்கே 3வருசம்ன்னா,ஜெவுக்கு,கனிக்கு எல்லாம் எத்தனை வருடமோ....
usha1 Years ago
இந்த நடராஜன் ,அம்மா சொன்னதை விட ஓவரா ஆக்ட்டு கொடுக்கிறர்....
அன்பு1 Years ago
"'கென்டகி கர்னல்’ என்ற பட்டம் பெற்ற மு.க.ஸ்டாலினை வாழ்த்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்"-----------> நடிகர் சங்கம் என்ன திமுகவின் கிளைக் கழகமா? அது சரி, பட்டம் வாங்க எவ்வளவு செலவு?
அன்பு1 Years ago
"'பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்து இருந்தார். ஆனாலும், வெளிப்படையாக அவரது பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டார்கள் அவரது ஆதரவாளர்கள்."------------> வேண்டாம் என்று சொன்னால் வேண்டும் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதே கட்சியின் பகுத்தறிவுக் கொள்கை. ஆங்கிலத் தேதியில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடுவது திராவிடத்தமிழ் கலாசாரம்.
அன்பு1 Years ago
"'சந்தர்ப்ப சூழ்நிலையால் இப்போது பிரிந்து இருக்கிறோம். மீண்டும் சேர்ந்து விடுவோம். அப்போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்’ என்று நடராஜன் கோபப்பட்டாராம்."------------> வழக்கமான போலிஸ் மரியாதையை அவருக்குக் கொடுத்தால்தான் யதார்த்த நிலைமை அவருக்குப் புரியும்.
அன்பு1 Years ago
"'தேவை இல்லாமல் வழக்கை இழுத்தடிக்கிறார்கள். எனவே விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று அன்பழகன் மனுத்தாக்கல் செய்யத் திட்டமிட்டு உள்ளாராம்.''--------> ஸ்பெக்ட்ரம், தா.கி., தினகரன் ஊழியர்கள் எரிப்பு போன்ற கேசுகளுக்கும் அன்பழகன் இப்படிக் கேட்பாரா?
vaikundamurthy1 Years ago
ஸ்டாலினுக்கு எதுக்கு திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் பாராட்டு தெரிவித்து தீர்மானம் இயற்ற வேண்டும். வேணும்னா தனிப்பட்ட முறையில் பாராட்டு தெரிவிக்கலாம். கருணாவுக்கோ அல்லது ஜெ விற்கோ பாராட்டு தெரிவித்ததில்லாவது ஒரு அர்த்தம் இருக்கு, அவர்கள் திரைப்படத்துறைக்கு சலுகைகள் அறிவித்தார்கள். ஸ்டாலினுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
நிரஞ்1 Years ago
ஏதோ வீரன் என்று பெயர் வைத்தால் வீரன் என்று நினைப்பு போலா.. ம்ம்ம்ம்ம்ம்
jayanantham1 Years ago
ஆத்தா பிரியமா ஊட்டிவிடுது.....அக்கா பிச்சு எடுத்துக்கப் பாக்குது.....!
Appan1 Years ago
சரத்குமர் ஆதாரம் இல்லாமல் ஏதும் செய்ய மாட்டார். தோண்டினால் தங்கச்சுரங்கம் தெறியும்.
Suresh.A.S.1 Years ago
கந்துவட்டி சங்கர் ??????????
வெங்கடேசன்1 Years ago
கே.ஃப்.சி சிக்கன் சாப்பிட்டே கர்னல் விருது வாங்கிட்டாரு ... ;)
Srinivasan1 Years ago
சரத்குமார் ஆளுங்கட்சி கூட்டணியில் இல்லை. அவர் போட்டியிட்டு வென்றது இரட்டை இலை சின்னத்தில்; எனவே அவர் அதிமுக உறுப்பினராகத்தான் சட்டப்படி செயல்பட முடியும்.
Manithan1 Years ago
சபாஷ் ரவிடலாஸ்.
sriram1 Years ago
ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள், மறந்துட்டேனுஙக!
sriram1 Years ago
கோமதி ஸ்ரீ கதையை சொல்லி மேலே இருப்பவருக்கு திகில் ஊட்டி விட்டீர்கள்!அனால் அன்றைய 33லட்சம் இன்றைய 33கோடிகளாக வேண்டுமானால் ஆகலாம் , 60கோடி?ம்ஹ்ம், கேஸ் சிக்கல் தான்..

செல்வி அம்மா எல்லாத்துக்கும் வந்துடுவாங்க, அவங்க யார் பக்கம் நு சொல்லிக்க முடியாது
Ravi,Dallas, USA1 Years ago
எனக்குத் தெரிந்து "கென்டகி கர்னல்" என்றால் கே.எஃப்.சி. சிக்கன் கடையில் இருக்கும் கர்னலின் ஃபோட்டோதான்!
Krishnan1 Years ago
'சந்தர்ப்ப சூழ்நிலையால் இப்போது பிரிந்து இருக்கிறோம். மீண்டும் சேர்ந்து விடுவோம். அப்போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்’ என்று நடராஜன் .......................
இது வரை நடராஜனை வெத்துவேட்டு ,தன் மனைவியின் மூலம் சொத்து சேர்க்கும் அரசியல்வாதி,அலட்டல் பேர்வழி என்றுதான் நினைத்திருந்தேன். இப்போது தான் தெரிகிறது இதெல்லாம் தற்காலிக நாடகங்கள் என்று.பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.கருணாநிதியின் உள்கை அல்லவா?கொஞ்சமாவது கபடத்தனம் இருக்காதா?
Thiyagarajan1 Years ago
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா ! ஆறு அடி நிலமே சொந்தமடா " எந்தப் படிப்பறிவுமில்லாத சர்வ மடையனுக்கும் புரியக்கூடிய இந்த எளிமையான பாட்டின் அர்த்தம் எப்படி இந்த சசிகலா, நடராஜன், ஜயலலிதா, கருணா, ஸ்டாலின், முக்கியமாக வீரபாண்டியாருக்கு விளங்காமல் போய்விட்டது? வாரம் ஒரு முறை சேலத்துச் சிங்கமென முன்னால் பெருமையாக அழைக்கப்பட்ட ஆனால் வீரக் கோழைப் பாண்டியாருக்கு சேலத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அவர் நிலத்தை அபகரித்தார், இவர் நிலத்தை அபகரித்தார் என்று புகார்கள் வருவதைப் பார்த்தால் மஹாகேவலமாக இருக்கிறதே! இவருக்குத்தான் இந்தக் கேவலத்திலும் இன்னும் எவ்வளவு தற்பெருமை !
திருச்சிக்காரன்1 Years ago
நடராஜனுக்கு இப்போதாவது தெரிந்ததே இதுவரை தான் ஒரு 'பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு' என்று...

ஆடிய ஆட்டமென்ன....

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்..!!
Displaying 1 - 25 of 25
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
07-மார்ச் -2012
சென்ற இதழ்
04-மார்ச் -2012

*Flip Version not supported in Devices