திவான் ஜர்மானி தாஸ் ( தமிழில்: பொன்.சின்னத்தம்பி முருகேசன்), சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53-வது தெரு, 9-வது அவென்யூ, அசோக் நகர், சென்னை -83. விலை 300 'சமஸ்தானங்களை மர்மத்திரை மூடி உள்ளது. என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்துக்கும் தெரியவில்லை. வெளி உலகமும் உள்ளே புகுவதில்லை’ என்று, ஜவஹர்லால் நேரு ஒரு முறை எழுதினார். இந்தியாவின் எல்லைப் பரப்புக்குள் இருந்த மகாரா ஜாக்கள் என்ன செய்தார்கள்? 'மகாராஜாக்கள் தமது வாழ்நாளில் பெரும் பகுதியை உறங்குவதிலும் மது அருந்துவதிலும், மங்கை ஆட்டங்களிலும், சீட்டு விளையாட்டுகளிலும், வேட்டையாடுவதிலுமே கழித்தார்கள்’ என்று ஜர்மானி தாஸ் சொல்லும் கதைகளைப் படிக்கும்போது, பல பக்கங்களை நம்பவே முடியவில்லை. இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஏதோ கதாசிரியரோ அல்லது வரலாற்று ஆய்வாளரோ அல்ல. கபூர்தலா. . .